பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

வைத்திருந்தாள். அவன் பூஜைக்கு வாங்கி வைத்த பூவை யாரோ ஒரு பூங்கோதைக்கு என்று தவறாக நினைக்கிறாள் மாத்திரை விழுங்கிய பிறகு உண்மை தெரிகிறது. அதற்குள் மருந்து வேகமாக வேலை செய்து விட்டது. மற்ற மருந்து களில் கலப்பு உண்டு; இதில் மட்டும் இருப்பது இல்லை

இது கதையின் தொடர்ச்சி. அதற்குப் பிறகு அவளைத் தூக்கிச் சுவரில் மாட்டித் தொங்கவிட்டான். சுவாமிக்குப் போடும் மாலையை இந்தச் சிவகாமிக்குப் போடத் தொடங்கினான். அவள் ஒரு குழந்தையை முதல் கணவனுக்குப் பெற்றெடுத்து அநாதை இல்லத்தில் விட்டு வைத்திருந்தாள் என்பது அவள் செத்த பிறகுதான் உண்மை தெரிந்தது. அந்தக் குழந்தையைத் தேடிக் கொண்டுவந்து, அவள் நினைவாக அந்தக் குழந்தையை வளர்க்கத் தொடங்கினான். அந்த அனாதைக் குழந்தை அம்மா வேண்டும் என்று அடம் பிடித்தது.

எந்தக் கடையிலும் அம்மா விலைக்குக் கிடைக்க வில்லை; அவனுக்கு மறுமணம் செய்து கொள்ள ஆசை தான். அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் குழந்தைக் குத் தாயாக ஒருத்தியைத் தேடினான். அந்தப் புதிய பாத் திரத்தை இந்தப் புதிய நடிகை ஏற்க முன்வந்தாள். அவள் தான் இந்த நடிகை.

‘நீங்கள் தாயாக நடிக்க எப்படி ஒப்புக் கொண் டீர்கள்?’

“நாம் ஒப்புக் கொண்டா தாயாகிறோம். ‘வந்து அடைகிறது’ என்று நயம்படப் பேசினாள்.