பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

‘அப்படி யாரையும் குறிப்பிட முடியாது. அவர் களுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்’ நெருங்கிப்பழகு வார்கள்; ஆனால் நெருங்கவிட மாட்டார்கள். நேசிப் பார்கள்; தம்மை இழக்கமாட்டார்கள்.

தத்துவம் பேச வரலை. சத்தியம் காண வந்தோம்

‘நீங்கள் திரைப்படத்துக்குக் கதை வசனம் எழுதித் தோல்வி அடைந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

எப்படிச் சொல்கிறீர்?

‘எதுகை மோனை செயற்கையாக இருக்கிறது அதை வைத்துத்தான்”

தாக்குகிறீரா தூக்குகிறீரா தெரியவில்லை

‘'உங்களைப் போன்றவர்கள் தான் திரைப் படத் துக்கு வர வேண்டும் என்பது எங்கள் ஆசை’

‘'ice வைக்கிறீர்; nice ஆகப்பேசித் தப்பிக்கப் பார்க்கிறீர்.

உங்களுக்கும் ஊர்மிளாவுக்கும் உறவு உண்டு’ என் கிறோம்.

‘அவள் என் மகனுக்கு மாமன் மகள்; அவனுக்கு அவளைக் கட்டிவைக்கப் போகிறேன். நீங்க ஒண்ணு’

“உறவு அல்ல தொடர்பு நீங்கள் அவளைத் தொட்டது உண்டா?'’

‘தொட்டது உண்டு; ஆனால் அவள் கெட்டது இல்லை ‘

‘காரணம்?