பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

அழகில்லை அதனால்தான் உன்னை மணக்கிறேன் என்றான்.

அதனால் தான் நானும் உங்களை ஒப்புக் கொண் டேன்’ என்றாள் அவள்.

  • - * அப்பா வைத்து விட்டுப் போன சொத்து அவனுக் குக் கை கொடுத்தது; கொஞ்சம் வசதியாகவே வாழ முடிந்தது.

‘வண்டலூரில் மனை சரசமாகக் கிடைக்கிறதாம். தேவி படித்து உரைத்தாள்.

‘வீடு கட்டப் பணம் வேண்டுமே ‘பாங்கியில் கடன் வாங்கிக் கொள்ளலாமே ‘கட்டிய வீட்டுக்கு யார் குடி வருவார்கள்’ ‘யோசிக்க வேண்டிய விஷயம்தான்’ அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

X - X ‘வர்ர அதிருஷ்டம் எங்கிருந்தாலும் வரும் என்று சொல்வார்கள்; அது போலத் தான் முகமூடிக் கொள்ளை யர்களும்.

‘தட்டுங்கள் திறக்கப்படும் என்பது கிறித்துவ வேதவாக்கு;

‘உடையுங்கள் திறக்கப்படும்’ என்பது புது தாக்கு: முகமூடிக் கொள்ளையர் உள்ளே நுழைந்தனர். இவனுக்கு ஒரு வியப்பு ஏற்பட்டது. தேவி நகைகளை எல்லாம் கழற்றி வைத்தாள். அவர்களைப்பார்த்துக் கேட்டாள்