பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ராசியான பேர்

‘என்ன புதுத்தலைப்பாக இருக்கிறதே நான் என்று வியக்கலாம் விஷயம் பழையது தான்.

நான் அதிசயமாக ஒரு ஸ்கூட்டர் வாங்கினேன். அது பதிவு செய்ய அனுப்பினேன். அதற்குக் கிடைத்த எண் அதிருஷ்டம் என்கிறார்கள். அது வாங்கிய பிறகுதான் நான் தொட்டது எல்லாம் பெண்ணாகவே இருந்தது, தவறு பொன்னாக இருந்தது.

நான் தாடி வளர்க்க ஆரம்பித்தேன்; வயது காரணம் என்று நினைக்காதீர்கள், சந்திரசேகர் பிரதமராக இருந்த போது அவர் அரை குறையாக வளர்த்து வந்த தாடி மீசை எனக்குப் பிடித்து இருந்தது. இன்னொரு அமைச்சர் ஆட் டுத்தாடி வைத்திருந்தார் இதுவும் என்னை ஓரளவு பாதித் தது என்று கூறலாம்.

அப்படியே வளர்த்தேன், செடி கொடிகளை வளர்க் கும்படி பிரச்சாரம் செய்கிறார்கள், அது முடிய வில்லை என்றாலும் இதுவாவது வளர்ப்போமே என்று விட்டு வைத்தேன். தண்ணீர் ஊற்றாமலே எப்படி வளர்கிறது? இது ஒரு ஆராய்ச்சி. வியர்வைதான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தேன்; இந்தக் காலத்திலே உடைகளில் தலை மயிர் முடியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இல் லாமல் போய் வருகிறது. நிச்சயம் அவர்கள் என்னோடு