பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

66

இந்த வகையில் போட்டி போட முடியாது என்பதிலே ஒரு திருப்தி. தொட்டுத் தொட்டுப் பழகிய பிறகு வெட்டிப் போட. மனம் வரவில்லை .

எப்படியாவது போ என்று விட்டு விட்டேன். என்னைப் பார்த்து என் நண்பர்கள் கூட வளர்க்க ஆரம் பித்தார்கள். முடியவில்லை; அவர்கள் வீட்டில் எதிர்ப்பு வந்துவிட்டது. அது விளைவிக்கும் குத்துச்சண்டையை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சத்தம் செய்யாமல் அவர்கள் இளைஞர்கள் ஆகி விட்டார்கள்.

நான் வளர்த்த அருமை தாடிக்கு என் மனைவி மறுப்பே சொல்லவில்லை: நிச்சயம் நான் விரைவில் சாமி யாராகி விடுவேன் என்ற நம்பிக்கை அவளுக்கு; அதனால் தான் அவள் என்னை எதுவும் சொல்லவில்லை. காவி உடை ஒன்று அவளே வாங்கிக் கொண்டு வைத்திருந்தாள். தாடி’ என்று என்னை அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். எங்கள் வீட்டை தாடிக்காரர் வீடு என்று சொல்லிவந் தார்கள். ‘தாடி’ என்று சொன்னால் நேரே என் முன்னே கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள்.

எனக்கு இந்தத்தாடி மீது வெறுப்பு வந்து விட்டது; யாரும் என்னிடம் கிண்டலாகப் பேசுவதை நிறுத்தி விட் டார்கள்; அளவுக்கு மீறி மரியாதை காட்டினார்கள். ‘தாத்தா’ என்ற புதிதாகப் பிறந்த ஐந்து வருஷம் ஆன பக்கத்து வீட்டுக்குழந்தை என்னை அழைக்க ஆரம்பித்தது. யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தது என்று கேட்டேன்.