நடிப்புக் கலை 99 அவருக்கு ஆண்டவன் கொடுத்த சொத்து அந்தச் சரீரமும் சாரீரமும், காப்பியடிப்பது தவறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறையும் சரீரத் திற்குத் தக்கவாறு அமைகிறது. அஃது ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. அதல்ை எந்த உயர்ந்த நடி கரையும் பார்த்து யாரும் காப்பி யடித்து கடிக்கக் கூடாது என்பது என் கருத்து. காப்பி யடிப்பது ஒரு தனிக் கலை. அந்தக் கலையைப் பயில் பவர்கள் தமக்கென்று வேறு ஒரு தனித் தன்மையை அமைத்துக் கொள்வது எளிதன்று. இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு சம்பவம் கினைவுக்கு வருகிறது. 1905-ல் .ே.ைகா படப்பிடிப்புக்காகப் பம்பாய் சென் றிருந்தோம். அந்தப் படத்தின் டைரக்டர் திரு. பி. கே. ராஜா சாண்டோ அவர்கள் மிகச் சிறந்த நடிகர். நான் மேனகாவில் கைனுமுகம்மதுவாக கடித் தேன். முதல் நாள் ஒத்திகை நடைபெற்றபோது அவர் கடித்துக் காட்டியபடி அப்படியே நடித்தேன். உடனே அவர் சிரித்துவிட்டார். 'என் இனப்போல் காப்பியடித்து கடிக்காதே. விஷயத்தை மட்டும் புரிந்துகொண்டு உனக்கு வருவதுபோல் நடி; அப்போதுதான் நீ தேர்ச்சி பெறமுடியும் என்ருர். அந்தச் சொல் என் கடிப்பை வளர்ப்பதற்கு மிகவும் பயன்பட்டது என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளுகிறேன். கடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப்போல் இப்போது திரைப்படங்களிலேயும் காடகங்களிலேயும் சிலர் நடிக்க முயன்று வருகிருர்கள். அது தவறு.