பக்கம்:நாடகக் கலை 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நாடகக் கலை ஒளிந்து மறைந்து கொள்ளையடிக்க வரும் திருடன் கூடக் காலில் சலங்கை கட்டிக்கொண்டு, ஆடிப்பாடி, ஆர்ப்பாட்டத்தோடுவருவான்! சதாரம், அதிருப அமராவதி ஆகிய நாடகங்களில் திருடன் வேடத்திற்கென்றே சில நட்சத்திர நடிகர்கள் இருந்தார்கள். அவர்கள் கடிக் கிருர்கள் என்ருல் அந்தக் காலத்தில் அபாரமான வதுலும் ஆதரவும் இருந்தன. அவர்களில் பிரசித்தி பெற்றவர் திரு. நடராஜ ஆச்சாரி என்பவர். அவருக்குப் போட்டியாகத் திரு. தங்கவேலுப்பிள்ளை என்று ஒருவர் இருந்திருக்கிருர். இந்தத் திருட வேடதாரிகளுக்குள் போட்டாப் போட்டி வைத்துச் சதாரம் நாடகம் கடை பெறும். இந்தப் போட்டி ஆட்டத்தைப் பார்க்க மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள். சில சமயங் களில் பெண்களும் திருடர்களாக நடிப்பது உண்டு. மனம்போல் வசனம் ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் நாடக மேடையில் உரைகடை தலைகாட்டத் தொடங்கியது. நடிகர்கள் தாமாகவே பாடல்களின் கருத்தை ஒட்டி இரண்டு வரி வசனமும் பேசி விடு வார்கள். நல்ல தமிழறிவும் கற்பனைத் திறனும் வாய்ந்த சில கடிகர்கள் ஒருபடி மேலே போய், கதைக்குப் புறம்பாகவும் சற்று நீண்ட வசனங்களைப் பேசத் தொடங்கினர்கள். இன்றும் பழைய ஸ்பெஷல் நாடகங்களில் இந்த முறையில்தான் உரையாடல் நடைபெற்றுவருகின்றது. அந்த நாளில் பேசத் தெரியாத அப்பாவி நடிகர் எவராவது அகப்பட்டுக் கொண்டால் ஆபத்துத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/40&oldid=1322571" இலிருந்து மீள்விக்கப்பட்டது