பக்கம்:நாடகக் கலை 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 க்ாடகக் கலை வைத்துக்கொண்டு அதற்கேற்பக் குரலே அடக்கியும் உயர்த்தியும் பேசவேண்டும். மின்சார விளக்குகள் எங்கெங்கே பொருத்தப்பட்டிருக்கின்றன; எங்கே நின்ருல் முழு வெளிசசமும் தன் மேல் விழும் மற்ற நடிகர்களை மறைக்காமல் எப்படி நிற்பது; என்பனவற் றையெல்லாம் கடிகன் கினேவில் வைக்கவேண்டும். நடிப்பின் நுணுக்கம் பக்கத்திலே கிற்கும் நடிகன் பாடத்தை மறந்து விட்டுத் தவிக்க நேரலாம். கினைவாற்றலுள்ள பண் பட்ட கடிகன் அதையும் சபையோர் அறியாதபடி சமாளிக்க வேண்டும். - - ஒரு சமுதாய நாடகத்தில் கடிகன் சொல்லும் ஒரு வார்த்தை, ஓர் அசைவு, கதைப் போக்கிற்கு இன்றி யமையாததாக இருக்கலாம், அந்த கேரத்தில் சபையில் ஒரு குழந்தையின் அழுகையாலோ அல்லது ஒரு பெரிய மனிதர் எழுந்து போவதாலோ, வேறு காரணங் களாலோ சலசலப்பு ஏற்படலாம். இதைப் போன்ற சக்தர்ப்பங்களில் கடிகன் தனது திறமையால் எப்படி யாவது சமாளித்துக் குழப்பம் அடங்கிய பின்பே அந்த வார்த்தைகளைச் சொல்ல முயலவேண்டும். இல்லாவிட் டால் கதைப் போக்கைச் சபையோர் புரிந்துகொள்ள முடியாமற்போகும். பண்பட்ட நடிப்பின் தன்மை ஒரு சிறிய யானைப் பொம்மை; மரத்தால் செய்யப் பட்டது. ஆல்ை, இப்போதும்ரம் மறைந்து விட்டது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/93&oldid=1322631" இலிருந்து மீள்விக்கப்பட்டது