பக்கம்:நாடகக் கலை 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

கதரின் வெற்றி, தேசீயக் கொடி, தேச பக்தி, போன்றவை தேசீய நாடகங்கள்.

சபாபதி, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் முதலியவை நகைச்சுவை நாடகங்கள்.

பதிபக்தி, ஐம்பதும் அறுபதும், விலாங்கு மனிதன் போன்றவை பிரசார நாடகங்கள்.

இப்போது நான் சொல்லி வந்த எல்லா வகை யான நாடகங்களிலும் பிரசாரம் இருக்கிறது.

புராண இதிகாசங்கள் தேவையா?

புராண இதிகாச நாடகங்கள் இன்று மக்களுக்குத் தேவையா? எனச் சிலர் நினைக்கிருர்கள். அவர்கள் நாடக நல்லியல்புகளைப்பற்றி அறியாதவர்கள். மேற் போக்காகப் பார்க்கிருர்களே தவிர ஆழ்ந்து சிந்திப்ப தில்லை. புராண இதிகாசக் கதைகளிலே சொல்லப்படும் பேருண்மைகளும் அறிவுரைகளும் இன்று நடை பெறும் சில முற்போக்கு நாடகங்களிலேகூடக் காணப் படவில்லையே! மகாகவி காளிதாசன், பவபூதி முதலி யோரின் நாடகங்கள் புராண இதிகாசக் கதைகள் தாம். மேல்நாடுகளில் இன்றும் அந்த நாடகங்களின் சிறப்பைப் போற்றுகிருர்களே! நடித்தும் வருகிருர் களே! காளிதாசனின் சகுந்தலை நாடகம் சந்திர மண்ட லத்தை எட்டிப் பிடித்த ருசியாவிலும் இன்று நடிக்கப் படுகிறதே!

சென்னையில் எந்தத்தேமிழ்ப் படமும் ஓடாத அளவுக்குப்பல வாரங்கள் ஒடிய பத்துக் கட்டளைகள்' என்னும் திரைப் படம் புராணக் கதைதான். ஆல்ை, அந்தப் படத்தின் சிறப்பு எந்த நாட்டினராலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/129&oldid=1322500" இலிருந்து மீள்விக்கப்பட்டது