பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


பலர்த்காரம்செய்யக் கையைப் பிடித்தாயிற்று. வழ்க்கக் போல் அறை விழவில்லை. கெருக்கடியான கட்டம். பின்னல் திரும்பிப் பார்க்கவும் கூடாது. என்ன் செய் வார் இளவரசன்? சந்திரவத ைபெண் வேடம் புனைந்த் ஆணுக இருந்தாலாவது சிறிது அதிகமாக கடிக்கலாம். அதற்கும் வழியில்லை. அவள் நிஜமாகவே பெண். அதிலும் மங்கைப் பருவம் கடந்த பெண். பலாத்காரம் செய்யப் பிடித்த கையை விடவும் முடியாமல் வேறு வழியும் தோன்றாமல் திண்டாடினர் இளவரசன்.

ராகவரெட்டி எங்கோ ஒரு மூலையில் அமைதி பாக உறங்குகிறர் என்பது மட்டும் புரிந்தது. அரங்கின் உட்புறம் அமர்க்களப்பட்டது சுபேதார் அண்ணுசாமி யாக வேடம் தரித்திருக்த எங்கள் பெரியண்ணு (திரு. டி. கே. சங்கரன்) அவர்களின் குரல் உட்புறம் பயங்கர மாக ஒலித்தது. அவர் கையில் வைத்திருந்த சவுக்கும் யார் மீதோ சாத்துபடி ஆயிற்று. பளார்-பளார்’ என்று ஒசையுடன விழுந்த சில பூசைகளின் ஒலியும் கேட்டது. சந்திரவதனுவும் சுண்டுர் இளவரசனும் மேடையில் பலாத்காரக் கட்டத்திலகின்று பரிதவித்துக் கொண்டிருந்தார்கள்.

சபையோருக்கு ஒருவாறு விஷயம் விளங்கி விட்டது. அவர்களென்ன இதற்காகப் பரிதாபப்படவா செய்வார்கள். விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித் தார்கள். நிலையைக் கண்டு சபையிலும் உள்ளேயும் ஒரே களேபரமாயிருந்தது.

திடீரென்று பேய் அறைந்தது போன்ற ஒரு பயங் கரமாக அடி இளவரசனின் முதுகில் விழுந்தது. அவ் வளவுதான். அறைந்தபின் ராகவரெட்டியால் கீழே

> - حسسه gsmr . .

i $