பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


விஷயம் தெரியாமல் வில்லில் கையை வைத்து அது முறிவதற்காக செய்திருந்த சூட்சுமத்தை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். இராமர் வ8ளக்கும்போது முறிய வேண்டிய வில்லை அந்த அரசரே முறித்து விட்டார். இப்போது நிலைமை என்ன? எப்படிச் சமாளிப் பது ஜனக மகாராஜா வேடம் புனைந்தவர் ஒரு பழைய கடிகர். அனுபவசாலி. வில் முறிந்ததும் அவர் திகைத் துப் போய் சபையோரின் சிரிப்புக்கிடையே காவலரை நோக்கி சிவதனுசைக் கொண்டு வாருங்கள் என்றால், வேறு ஏதோ ஒரு விளையாட்டு வில்லைக் கொண்டு வந்து விட்டீர்களே. மடையர்களே, போய் சிவதனுசை எடுத்து வாருங்கள்’ என்றார் பிறகு காட்சி ஒருவாறு சமா ளிக்கப்பட்டது.

நகைச்சுவை மிகவும் சிறப்பான ஒரு பகுதி தான். ஆல்ை இந்த மாதிரி எதிர்பாராத நகைச் சுவை ஏற்பட்டு எங்களைத் திண்டாட்டத்தில் வைத்து விடும் போதுதான் மிகவும் கஷ்டமாய் இருக்கும். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் எப்படியாவது சாதுர்யமாகச் சமாளிக்க வேண்டும்.

-சென்னை வாளுெவி 5-11-1959