75
இந்த அருமையான பாடலை அண்மையில் நடைபெற்ற சுவாமிகளின் நூற்றாண்டு விழாவினை யொட்டி சென்னை வானெலியில் நிகழ்த்திய சதி அனுதுயா’ நாடகத்தில் நாரதராக நடித்த இசைமணி சீர்காழி கோவிந்த ராஜன் அற்புதமாகப் பாடினர். சங்கீதத்தின் சாரத்தைப் பற்றிய இன்ைெரு பாடலைப் பாருங்கள்:
‘சங்கீத சாரமே
சாற்றவும் அபாரமாமே (*).
ஜதி சுதி லய வகை
மனமதை ஒரு கிலை
தனிலுற வலி நாட்டும்-மதி
தருகிஜ மது காட்டும்-சிவ
தலமதில் அருள் கூட்டும்-ஒரு
சஞ்சலம் இல்லாம லோட்டும்’ (s), இத்தகைய அரிய பொருள்செறிந்த பாடல்கள் தமிழிசை யரங்குகளிலே இடம்பெற வேண்டுமென்பது என் வேண்டுகோள்.
‘தமிழே சிறந்தது என்று தொடங்கும் சுவாமி
களின் மற்றாெரு பாடல் தமிழ் மொழிக்குரிய சிறப் பியல்புகளை யெல்லாம் உள்ளடக்கியதாயும் பெரும் புலவர்களுடைய போற்றுதலுக்குரியதாயும் அமைக் திருக்கிறது.
‘அமிழ்தினிற் சிறந்தது
ஆரியத் துயர்ந்தது அகத்தியஞர் சிவனிடத்தில் உணர்ந்தது அடி சீர் மோனை எதுகை தொடை சேர் தளையின் வகை ஆகும் பாவினம் சந்தமா விரிந்தது-வண்ணத்
(தமிழே)