பக்கம்:நாடு நலம் பெற.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நாடு நலம் பெற தேர்வு முறைகளும் அமைந்தால் உண்மை அறிவு புலனாகும்! நல்ல கல்வியாளர் நாட்டில் தேர்ந்தெடுக்கப் பெற, அவர் வழியே நாட்டுக்கல்வியும் நலம், பெறும். நாட்டுக் கல்வி நலம் பெற்றால் பிற எல்லா நலன்களும் நாட்டில் நிரம்பும் என்று அன்றும் இன்றும் அறிவுடைய வர் அனைவரும் கூறிவருகின்றனர். எனவே அரசும் கல்வித் துறையும் இந்த வகையான மாற்றங்களை உடனடியாகச் செய்ய முற்படவேண்டும். கல்வி, சமுதாயத்தை உயர்த்துவது; வாழ வைப்பது. எனவே இதில் அரசியல் சிறிதும் கலக்கக் கூடாது. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வரும்போது தத்தம் தலைவர் வாழ்வினை, அது எவ்வளவு வரண்டதாயினும்மாணவர் தம் பாடநூல்களில் புகுத்துவதும், மாற்றுக் கட்சி ஆட்சிக்கு வந்தால், அதை எடுத்துத் தம் தலைவர் புகழ் பாடும் பாடங்களைச் சேர்ப்பதும் வழக்கமாக வரு கின்ற அநாகரிகச் சேற்றில் நாம் ஆழ்ந்துவிடக்கூடாது. அது மாணவர்தம் நல்லறிவை-உண்மை அறிவை மழுங்கச் செய்யும் - மாசுபடுத்தும்- அதனால் நாடு நாடாகாது அழியும். பாடநூல்களை அரசாங்கமே தயாரிக்க ஏற்பாடாகி வருகின்றது. அது ஒரு வகையில் நல்லது என்று சிலர் கூறினும் பொதுவாக அந்த முறையினைச் சிறந்தது என்று கூற முடியாது நாட்டில் ஒவ்வொரு துறையிலும் ஆய்ந்து அறிந்து தெளித்த நல்லோர் பலர் உள்ளனர். அவர்களை விட்டுவிட்டு அரசாங்கம் தனக்கு வேண்டிய வர்களை குழுவாகவோ தனியாகவோ அமைத்து நூல் களை எழுதச் செய்து, அந்த நூல்களையே நாட்டில் உள்ள அனைவரும் படிக்க வேண்டும் என வற்புறுத்துவது வாழ்வுக்கு-நல்வாழ்வுக்கு ஏற்றதாகாது. முன்பெல்லாப் நூற்றுக்கு மேற்பட்ட பதிப்பகங்கள், பலப்பல அறிஞர் கள்- நல்லாசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு, ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/100&oldid=782339" இலிருந்து மீள்விக்கப்பட்டது