பக்கம்:நாடு நலம் பெற.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 99 வகுப்பிற்கு பலப்பல பாட நூல்களை எழுதி வெளியிடுவர். அவற்றை ஆராய்ந்து, பிழையுளதேல் திரும்பி அனுப்பித் திருத்தம் செய்யவும் நல்லனவற்றை ஏற்றுக்கொள்ளவும் எனத் தனித்த அறிஞர் குழு அரசாங்கத்தால் அமைக்கப் பெற்றது. அதன் வழியே ஒரு வகுப்பிற்கு ஒரே பாடத் திற்குப் பல நூல்கள்-பல வெளியீட்டாளர்களால் பல அறிஞர்களால் எழுதப் பெற்று வெளிவரும். ஒவ்வொரு பள்ளியும் அவற்றை ஆராய்ந்து, தத்தமக்கு வேண்டிய நல்லனவற்றை எடுத்துக் கொள்ளும். - அக்காலத்தில் இளங்குழந்தைகள் உள்ளத்தே நல்ல பாடங்கள்- விளக்கங்கள் பதியும். அவர்கள் வளர வளர, அவர் வழியே சமுதாயம் நலம் பெறும். ஆனால் இன்றோ ஒரே நூலை அது தரமற்றதாயினும் பிழையுற்றதா யினும் எல்லோரும் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை வளரும் கல்விக்கு முட்டுத் கட்டையாக்கி, நல்ல கல்வியையும் அதன் வழியின்னயும் நலனையும் இல்லையாக்குகின்றது. இது ப்ற்றிப் பல அறிஞர்கள் பத்திரிகைகளில் எழுதிவருகின்றனர். எனினும் அரசு கவலையற்றுச் செயலாற்றுகின்றது. இதுநாட்டுக்குக் கல்வியால் நலம் விளைவதற்கு மாறாகவே அமையும். எனவே உடன் அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். இவ்வாறே தொழிற்கல்வி முறைகளும் பயிற்சிக்கல்வி முறைகளும் நிரம்ப மாற்றப் பெறவேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்கு, பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ளமை போன்று- தனிப் பயிற்சி வகுப்புகள் ஒராண்டு அளவை யேனும் இருக்க வேண்டும். நேற்று முதுநிலைக் கல்வி பயின்று இன்று அதே கல்வி பயில்வாருக்குப் பாடம் சொல்லும் அவலநிலை இன்று நாட்டில் உள்ளது: இதனால் பயிலும் மாணவர் தரம் இழந்து தடுமாறு கின்றனர். கல்லூரி ஆசிரியர்களுக்குப் பாடங்கள் தயார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/101&oldid=782341" இலிருந்து மீள்விக்கப்பட்டது