பக்கம்:நாடு நலம் பெற.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நாடு நலம்பெற 21) உள்ள பிரிவு போகாமல் உயர்ந்தார் கற்றோர் எனக்காட்டி மெல்ல அல்லார் தமைவெட்டி வேறோர் பிரிவு - தோன்றுவதென்? உள்ள இடங்கள் அத்தனையும் உரிய வகையில் பகிர்ந்தளித்து நல்ல அறிவைப் பெற்றவரை நாட்டில் உலவ விடல்நன்றே! 22) பட்டம் ஒன்றே பதவிக்கு பயின்றார் வருக! எனும்கொள்கை மட்ட மாக, அறிவினுக்கே வருகை காட்டும் - செயல்வேண்டும் இட்டார் தமக்குப் பதவிஎனும் இழுக்கைப் போக்கி 4 . . வல்ல்ார்க்கே முட்டா வகையில் இடம்கிடப்பின் முற்றும் கல்வி வளம்பெறுமே! 23) தொழிற் சாலைகளே ஆய்வாளர் தொகையை - வளர்த்து அவர்களைத்தம் தொழிற்சாலையிலே பணியமர்த்தித் தொலையா வாழ்வை நாட்டினுக்கு அளித்தால் என்னோ? மேநாட்டர் அவ்வாறன்றோ - ச்ெய்கின்றார் உளத்தால எண்ணி உடன்இன்றே உற்ற, செயலைத் தொட்ங்கிடுவீர் 24) ஆய்வுக் கென்றே புகுந்தங்கே அவரே சொன்னார் . இவர்சொன்னார் மேய்வுக் கேகும் வெள்ளாட்டின் மேலே பலமேற் கோள்காட்டி தோய்வுற் றாலும் பின்சென்று சொளையாச் பல்லாயிரம் தந்து ஆய்வுப் பட்டம் பெற்றிடுவார்! அதனால் நாட்டுக்கென் பயனோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/114&oldid=782368" இலிருந்து மீள்விக்கப்பட்டது