பக்கம்:நாடு நலம் பெற.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நாடு நலம் பெற வேறொன்றறியா, நல்ல தெய்வ நிலையில் நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை என்ற மனித உணர்வில் திருந்தி வாழத் தொடங்கினால்தான் உலகம்- உயிர் அனைத்தும் உய்ய வழியுண்டு. மிருகமாகிய மனிதன்அதனினும் கீழ் நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் மனிதன் இதை எண்ணியாவது திருந்துவானா? திருந் தினால் உய்தி உண்டு. அன்றேல் கி.பி. 2000த்தை நல மாகக் காணுவார் யாரே! கலிபோர்னியா எரிவதும், மராட்டியம் குமுறி வெடிப்பதும் எதனால்? எண்ணிப் பார்த்து மனிதன் வாழ வேண்டும். இனி இவ்வாறு நிலநடுக்கம் போன்ற உற்பாதங்களும் பிற கொடுமைகளும்- மழையின்மைபெருமழை- பருவநிலை பற்றியவையும் முன் கூட்டி அறியமுடியாதா? என்ற கேள்வி எழும். நிலநடுக்கத்தை முன் கூட்டி அறிய முடியாது என்கின்றது ஆய்வுத்துறை. பிறவற்றைப்பற்றி அன்றாடம் வானொலி, தொலைக் காட்சி, நாளிதழ்கள் போன்றவை முன் கூட்டி அத்துறை யினர் குறிப்பதாகக் காட்டுகின்றன. என்றாலும் சில அதன்படி நடப்பதில்லை. கடந்த இருவாரங்களில் (அக்டோபர் 1-13) வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. சென்னையில் அதன் சுற்றுப்புறங்களில் அடுத்த இரண்டு நாட்களில் பலத்த மழை பெய்யும்' என அனைத்தும் அறிவித்தன. ஆனால், அந்த இரு நாட்களிலும் முற்றிய வெய்யிலே காய்ந்தது அப்படியே அடுத்த இரண்டு நாட்களில் நகரின் சில பகுதிகளில் தூறல் இருக்கும் என்று அறிவித்த மறுநாளே, இந்த ஆண்டின் இதுவரையில் பெய்யாத அளவிற்கு (14.10.93 இல் 5 செ. மீ அளவு) மழை பெய்துள்ளது. இவ்வாறே இந்து 24-14.95லும் எக்ஸ்பிரஸ் அதே நாளிலும் பெரும் புயலும் காற்றும் கனமழையும் தமிழகத்தைப் பாழ் படுத்தும், அதனால் கடலோரக் கல்வி நிலையங்கள்யாவும் மூடப்பட வேண்டும் எனவும் அரசாங்கம் ஆணையிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/136&oldid=782417" இலிருந்து மீள்விக்கப்பட்டது