பக்கம்:நாடு நலம் பெற.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நாடு நலம் பெற என்கின்றார். ஆம்! கடவுளரையும் பிறரையும் தன் தோற் றத்தால் மயக்கும் திறன் வாய்ந்த பேரழகி. அத்தகைய உயர்ந்த"தெய்வநலம் சார்ந்த மாயைக்கு அவருடைய தோழிப் பெண்கள் தலையை நன்கு சீவி, கருங்கூந்தலை ஒழுங்கு படுத்தி, பின்னலாகப் பின்னி ழுதுகுப்புறத்தில் நீண்ட நிலையில் தொங்க் விடுகின்றனர். அது மன்மதனு டைய வில்லில் பின்னிய வண்டுகளால் ஆகிய நாண் அவிழ்ந்து விட்டது போல் இருக்கின்றது என்கின்றார். கரிய கூந்தல்-முப்பிரிவால் அல்லது ஐம்பிரிவால் பிரித்துப் பின்னிய நிலையில் அடுக்கடுக்காக உள்ள வளைவுகள் கரிய வண்டுகள் போல் காட்சி தருகின்றன. எனவே மன்மதனுடைய சுரும்பு ஆகிய வண்டுகளாகிய நாணில் அவை ஒன்றன்பின் ஒன்று ஒட்டித் தொங்குவது போல அமைகின்றது என்கிறார். "மாரவேள் சிலை வளைத்திடப் பூட்டிய வண்டு நாரிஒர்சிலை நெகிழ்ந்து விட்டென ஒருநாரி காரவா மலர் குழற்சடைக் கைபுனைந்து இயற்றி வீரவேல் நெடுங்கண்ணிதன் முதுகுற விடுத்தாள்' என்பது அவர் கவி. எனவே மலர் சூடும் பெண்கள் கருவண்டுகள் காட்சி தருவதுபோல் அமைந்த பின்னல் வளைவுகள் - ஐம்பால் காட்சி அமைய முதுகில் நீண்டு தொங்கும் வகையில் அமையுமாறு அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது தெளிவு. ஆனால் அவ்வாறு அன்றி, தாலி அறுத்தாள் வீட்டில் தலைவிரித்து ஒப்பாரி பாடுவது போலப் பெண்கள் கூந்தலை விரித்து விடுவார்களானால் நாட்டுநிலை என்னாகும். இளமையில் பின்னலும் முதுமை யில் கொண்டையும் பெண்களுக்கு இயல்பாக அடைய வேண்டுவன. ஆனால் முதுமையை எட்டும் பேரன், பேத்தி எடுக்கும் வயதுடைய பெண்களுள் சிலரும் கூட இந்த நிலைக்கு மாறாகக் காட்சி தருவதும் அதை அரசாங்கம் ஏற்று ஆதரிப்பதும் நா. டின் எதிர்காலத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/148&oldid=782443" இலிருந்து மீள்விக்கப்பட்டது