பக்கம்:நாடு நலம் பெற.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நாடு நலம் பெ ற வழி! அவ்வழியினை அனைவரும் பின்பற்ற முயல்வார் களாக! மேலே கல்கி அவதாரம் பற்றி - புதிதாக வந்த "மன்ரித கல்கி'யைப் பற்றி (நாளிதழ் காட்டி) சொன்னேன். தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் (Indian Express) 31.12.95 ஞாயிறு இதழில் புதிய சிவன், வந்தமை பற்றி எழுதியதைக் குறிப்பிட விரும்புகிறேன். Austrian Sivain Kaieasan என்ற தலைப்பில் எங்கிருந்தோ வந்த தன்னைச் சிவன் எனக் கூறிக் கொண்டு, உடன் உள்ள ஒரு ஜர்மனி லிருந்து மயக்கி வந்த பெண்ணைப் பார்வதி எனக் கூறிக் கொண்டு கேரள ஆலப்புழை வந்து தங்கி, அதையே தன் கயிலாசமாகக் கூறித் தங்க முடிவு செய்ததை அந்தச் செய்தி காட்டுகிறது. அவன் தன்னைச் சிவன்' எனக் கூறிக் கொண்டாலும், பெண்களொடு பழகும் போது கிருஷ்ண surmé, a dismissé groil 1603 ‘Though the he belives that he is the reincornation of Lord Siva, his nature is akin to that of Lord Krishna especially with women' என எழுதிக் காட்டுகிறது. அச்செய்தி இப்படித் தம்மைக் கடவுளராகக் காட்டி, கழிவுறு நிலையில் உண்மைக் கடவுளும், அதன் வழிச் செயல்படும் நிலம் எனும் நல்லாளும் வெறுமனே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பர்களா? இவ்வாறு தவறு செய்பவர்களை மக்கள் கண்டிக்காது, அவர்களுக்குத் துணை நிற்பார்களா னால் நாடு துன்புறாது இன்பத்தில் திளைக்குமா? எண்ணிப்பாருங்கள். இன்று விநாயகர் பால் உண்பது பற்றி நாட்டில் பெரும் செய்தி உலவுகிறது. அடியவர்கள் விநாயகர் உண்மையிலேயே உண்டார் என்கின்றனர். எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் கூட அவ்வாறு ஊட்டியதாகக் கூறி னர்ர்கள். நம் நாட்டில் மட்டுமின்றி மேலை நாடுகளிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/162&oldid=782475" இலிருந்து மீள்விக்கப்பட்டது