பக்கம்:நாடு நலம் பெற.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 163 கெனவே பச்சைத் தர்ப்பைப்புல்லைச் சேகரித்து வீடு தோறும் கொண்டு வந்து தருவார். அதை ஏளனம் செய்த வர்களும் உண்டு.ஆயினும் சில ஆண்டுகளுக்கு முன் மேலை நாட்டு அறிவியலார் அதன் திறனையும் கிரகணத்தால் மாசுபடாது பொருள்களை அது காக்கும் திறனையும் ஆராய்ந்து கண்டு எழுதியுள்ளமையை அன்று நம் நாட்டு நாளிதழ்களும் வெளியிட்டன. (1990லோ அதற்கு முன் பாகவோ இருக்கலாம்) மத்திய பிரதேச ரேவா பல்கலைக் கழகத்தில் 1980ல் ஆய்ந்த வகையில் இது உண்மை எனவும் காட்டப்பெற்று விளக்கப்பெற்றது (The Hindய 17.10.95 Page 5 & Indian express 22. 1095 Page–2) G&m 3Lifs...it எத்தனையோ பாதகங்கள் நம் நாட்டிலும் உலகிலும் நிகழும் என்று கூறியுள்ளார்கள். அதற்குச் சான்றாக முந்திய நிகழ்ச்சிகளையும் மேற்கோள் காட்டியுள்ளனர். டாக்டர் S. K. ஜெயின் என்பார் நிலநடுக்கம்,பெரும்புயல், கொடிய கொடும் செயல்கள், அரசியலில் அவல அலைகள் பல நிகழவும் வாய்ப்பு உண்டு என்று கூறுகின் proft. (Indian Express— 22, 10.95 Page—1) இருகிரகணங்கள் உண்டானமையால் குருசேஷத்திரப் பாரதப்போரே நிகழ்ந்தது என திரு. B.V. இராமன் அவர்கள் காட்டியுள்ளார்கள்(The Hindu 17.10.95 Page3) பழங்காலத்திலிருந்து கிரகணங்களின் விளைவுகள்- அவை வழி மாநிலங்களிலும் மனித வாழ்விலும் நேரும் நலக் கேடுகள் பற்றியும் விளக்கி, இவற்றை நன்கு அறியா நிலையிலேயே சிலர் தப்பாக வாதாடுகின்றனர் என்பதையும் அதே கட்டுரையில் விளக்கியுள்ளார். சோதிடம் பொய்யாது மெய் என்பதறிவதற்கு சூழ் கிரகணம் சாட்சியாம்' என்று முன்னுறு ஆண்டுகளுக்கு முன் எழுதிய சதகங்களும் காட்டுகின்றன. (அறப்பளிச்சுரர் சதகம் 5வது பாடல்) டாக்டர். K. நாகராஜ் என்பவரும் பிருகதி சம்மதியை ஏதுக்காட்டி விரைவில் நாட்டில் நிகழப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/165&oldid=782481" இலிருந்து மீள்விக்கப்பட்டது