பக்கம்:நாடு நலம் பெற.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 5t தடவினால் உடன் குணம் காணலாம் என்றார். அவ்வாறே தடவப் பெற்றபின், இறக்க இருந்த குழந்தை பிழைத்து, இன்று ஐம்பதுக்கு மேலாகி நன்கு வளர்ந் துள்ளது. எனவே நல்ல தெளிந்த- அறிந்த ஆங்கில நெறி. அறிந்த மருத்துவர்களெல்லாம்கூட, இந்தத் தமிழ்நாட்டுச் சித்த வைத்திய முறையினை-இந்திய ஆயுர்வேத முறை யினைக் கொள்ளுகின்றனர் என்பது கண்கூடு. . 'காட்டு வைத்தியச் சிறப்பு பாளையங்கோட்டை சித்த வைத்தியக்கல்லூரியின் முதல்வராயிருந்து ஒய்வுபெற்ற டாக்டர் தியாகராயர்இன்றும் வாழ்கின்றார். அந்த நல்லவர் இந்த முறை யினையே கையாளுகிறார். ஒரு முறை டாக்டர், ரா.பி. சேதுப்பிள்ளை (என் ஆசிரியர்)அவருக்கு இருந்த நோய்க்கு எந்த ஆங்கில வைத்தியரும் வழி காட்டாது, ஏதேதோ செய்து கைவிட்டனர். நான் அப்போது காஞ்சிபுரத்தில்இருந்தேன். அங்கே நாராயண சேவாச்சிரமம் அமைத்து நல்ல அடிகளார் மருத்துவத் தொண்டும் செய்து வந்தார். அவரிடம் காட்டலாம் என்றேன், வந்தார்; விரைந்து குணம் பெற்றார். அதை உணர்ந்து போற்றும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் குருபூசையில் அவர்கள் வந்து சொற்பொழிவாற்றிச் சென்றார்கள். அவருடைய நண்பர் ஒரு பெரிய மருத்துவர் (பெயர் நினைவில்லை), பிராட்வே டாக்கீஸ் பக்கததிலே இருந்தவர் என நினைக் கிறேன். இவை 1940க்கு முன் நிகழ்ந்தவை. பலருக்கும் சிறக்க வைத்தியம் செய்த அவருக்கு, அவர் வாயை ஒட்டி வந்த புண்ணைப் போக்க மருந்து காணமுடியவில்லை. பலவகையில் முயன்று தோற்றார். பின் சேதுப்பிள்ளை அவர்கள் தாம் பெற்ற அனுபவத்தைச்சொல்லி, அவரிடம் கடிதம் தந்து காஞ்சியில் என் வீட்டிற்கு அனுப்பினார். நானும் உடன் அவர்களை நாராயண சேவாச்சிரமம் அழைத்துச்சென்று, அடிகளாரிடம் சேதுப்பிள்ளை அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/53&oldid=782575" இலிருந்து மீள்விக்கப்பட்டது