பக்கம்:நாடு நலம் பெற.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 . நாடு நலம் பெற பலமுறை கேட்டும் சொன்னால் பலிக்காது' என்று சொல்லித் தன்னுடனேயே கொண்டு சென்று விட்டார் கள். இத்தனைக்கும் அவர்கள் என் அன்னையைக் காட்டி லும் என்பால் அன்புடையவர்கள்; நான் வருந்தக் காண மாட்டாதவர்கள். அப்படிப்பட்டவர்களே இரு சாதாரணப் பச்சிலையினைச் சொல்லாமல் மறைத்து, மறைந்து விட்டார்கள் எனின் இவ்வாறு எத்தனை மூலிகைகள் மறைக்கப் பெற்றனவோ என எண்ண வேண்டியுள்ளது. 20. தமிழ்ப்பல்கலைக்கழகத்தே-மூலிகைப்பண்ணை நான் இந்தச் சிறப்புச் சொற்பொழிவை எனக்களித் துச் சிறப்பினைச் செய்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தே முதல் அமைக்கப் பெற்ற ஆட்சிக் குழுவில் உறுப்பினனாக இருந்தேன். உடன் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் அன்றைய இயக்குநர் திரு. சுப்பிரமணியமும் இருந்தார். ஒரு கூட்டத்துக்கு நானும் அவரும் சென்றோம். அப்போது அலுவலகம் நகரின் பழைய அரச அரண் மனையை ஒட்டி இருந்தது-நான்கு அறைகள் அங்கே விருந்தினர்களுக்கென ஒதுக்கப்பெற்றிருந்தன. விடியல் நான்கு மணிக்கு இரெயில் இறங்கிச்சென்று அவரும் நானும் தனித்தனி அறையில் அமர்ந்திருந்தோம். காலைக் கடன்களையெல்லாம் முடித்து, சிற்றுண்டி கொள்ளப் புறப்படுகையில், அவர்தம் காலில் அரிப்பு ஏற்படுகிற தென்றும் சிறு வீக்கமும் உள்ளதென்றும் கூறி, நடக்க முடியுமோ என அஞ்சினார். அங்குச் சுற்றிலும் பல செடி கொடிகள் இருந்தமையின் அவற்றுள் ஏதேனும் வண்டு அல்லது பூச்சி கடித்திருக்கும் என்றார்; அன்றி அறையி லேயே.ஏதேனும் பூச்சி, புழு தீண்டி இருக்கலாம் என்றார். நான் அவரை உட்கார வைத்து விட்டு, பக்கத்தில் சென்று பத்து இலைகளைக் கொண்டு வந்து கசக்கி இருமுறை அந்த அரிப்பு உண்டான இடத்தில் தேய்த்தேன். இடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/58&oldid=782585" இலிருந்து மீள்விக்கப்பட்டது