பக்கம்:நாடு நலம் பெற.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 59 காணப்படுகின்றது. சாதாரண நீதிகளைப் புகட்டும்வாழ்வைப் பலவகையில் கூறிட்டுக்காட்டும் சதகங்கள் கூட நல்வாழ்வுக்கு வழிகாட்டும் பாக்களைத் தந்துள்ளன. மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது மறுவறு விரோசனந்தான் வருடத் திரண்டுவிசை தைலம் தலைக்கிடுதல் வாரத்தில் இரண்டு விசையாம் மூதறிவினோடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்குழலுடன் சையோகம் முற்றுதயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய் . முதிரா வழுக்கை இளநீர் - சாதத்தில் அளவா னாலும் புசித்தபின் தாகம் தனக்கு வாங்கல் தயையாக உண்டாயின் உலாவ விவைமேலவர் சரீரசுகம் ஆம்என்பர் காண் மாதவ குமாரி சாரங்கத் துதித்த்குற வள்ளிக் குகந்த சரசா . மயிலேறி விளையாடு குகனே புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே (குமரேசர் சதகம் 19) என்று நோய் வாராமல் காக்கும் வழிகளைத் தொடர்ந்து காட்டிக்கொண்டே செல்கின்றது. தைலம் தலைக்கிடுதலையும், பின் பல நம்பிக்கை அடிப்படையில் உண்டான கொள்கை வழி வாரத்தில் இன்னின்ன நாளில் தைலம் தலைக்கிட்டால் இன்னபயன் எனவும் சதகம் பாடி யுள்ளது. 'வ்ரும் ஆதிவாரம் தலைக்கெண்ணெய் ஆகாது வடிவமிடும் அழகுபோகும் வளர்திங்களுக்கதிக பொருள்சேரும்; அங்கார வாரம்தனக்கு இடர்வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/61&oldid=782593" இலிருந்து மீள்விக்கப்பட்டது