பக்கம்:நாடு நலம் பெற.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நாடு நலம் பெற சித்த வைத்தியம் மட்டும் எப்படி விலக்காக முடியும்! ஆனால், இந்த அவலநிலை மாறினாலன்றி நாடு நலம் பெறாது- செம்மையுறாது - சிறப்பும் எய்தாது. இதை மக்கள் உணரவேண்டும். இவ்வாறு அராங்கமும் மக்களும் உணர்வார்களேயாயின் சித்த மருத்துவமும் பிற நாட்டுப் பழம்பெரும் வாழ்க்கை நெறிகளும் வள்ளுவர் காட்டிய வழிமுறைகளும் சிறக்க வழிபிறக்கும். சொல்லுதல் யார்க்கும் எளிது, அரியவாம் சொல்லிய வண்ணம்செயல்' என்ற வள்ளுவர் வாக்கை மதித்து, 'தமிழ் தமிழர்” என்று மேடைகளில் விண்கூச்சல் இடுவதை விட்டு, தமிழர்தம் பண்பாடு, கலை. நாகரிகம், உடை, உணவு நோய்வாராமுறை, வந்தால் த்ணிக்கும் சித்த வைத்திய முறை என்பன போன்றவற்றைச் செயல்படுத்திச் சிறக்க வழி காண வேண்டும், இச்சொற்பொழிவை அமைத்த தமிழ்ப் பல்கலைக் கழகமும் அதன் மூல காரணமான மூலிகைமணி.வேங்கடேசன் அவர்களும் மேற்கொள்ளும் பணி சிறப்பதாக இவர்கள் வழியே நாட்டில் சித்தமருத் துவம் செழித்து மக்கள் நல்வாழ்வு வளர நாம்-மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முயல வேண்டும். அரசும் தக்க வழிமுறைகளைக் கண்டு, தங்கள் வழியே இம்முறை சிறக்க ஆக்கப்பணிகளைப் புரிய வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம்! சேர வாரும் சகத்திரே, என அனைவரையும் அழைத்து அமை கின்றேன். வணக்கம் வாழ்க மூலிகை வளம்! வளர்க நாட்டின் நலம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/74&oldid=782623" இலிருந்து மீள்விக்கப்பட்டது