பக்கம்:நாடு நலம் பெற.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 91. போதிலும் வேண்டிய சீர் சிருத்தம் விளையவே இல்லை. - - தேர்வு முறையிலும் இதே நிலை காணப் பெறு கின்றது. பள்ளியில் அல்லது கல்லூரியில் பயிலும் மாணவர் அந்தந்தப் பள்ளி- கல்லூரிகளிலேயே தேர்வு எழுதலாம் என்ற நிலை ஏற்கக்கூடியதாகாது. முன் பெல்லாம் ஒரு கல்லூரி மற்றொரு கல்லூரியிலும் ஒரு பள்ளி மற்றொரு பள்ளியிலும் எழுத வேண்டும். பச்சையப்பன் கல்லூரி லயோலாவில் எழுதும். லயோலா வேறு கல்லூரியில் எழுதும் அந்த வேறு கல்லூரி பச்சையப்பரில் எழுதும். பள்ளிகளிலும் அப்படியே ஒருரில் ஒரே பள்ளியோ ஒரே கல்லூரியோ இருக்கு மானால் அதற்குத் தனி ஏற்பாடுகளைச் செய்வர். அந்தந்த ஆசிரியரோ தலைமை ஆசிரியரோ தேர்வு நடத்தும் பொறுப்பை ஏற்க விட மாட்டார்கள். இந்த நிலையை ஏன் மாற்றினார்களோ தெரியவில்லை. அதே பள்ளி அல்லது கல்லூரியில் அதே முதல்வர் அதே ஆசிரியர்கள் மேற்பார்வையில் தேர்வு நடப்பது பொருந்துமா?பேருக்கு வேறு பள்ளி அல்லது கல்லூரியிலிருந்தோ, அரசாங்கக் கல்வித் துறையிலிருந்து ஒருவரோ, இருவரோ, வருவர். சில பள்ளிகள் அவர்களுக்குச் செய்வன செய்து, சாந்திப் படுத்தி, தலைமை ஆசிரியர் அறையிலேயே அமர வைத்து, தத்தம் செயல்களை - மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் திறனில் தலை நிற்பன.(இவ்வாறு சில ஆண்டு களுக்கு முன் ஒரு கல்லூரி செய்ததை விடைத்தாள் திருத்துவோர்- ஆசிரியர் சொன்னதை அப்படியே எல்லோரும் ஒரே மாதிரியாக எழுதி இருந்ததைக் கண்டு பிடித்துத் தேர்வு ஆணையருக்கு உணர்த்த, அக்கல்லூரி சில ஆண்டுகள் தேர்வு இடமாக இருக்கக் கூடாது என்று சட்டமிட்டு நிறுத்தித் திருத்தினர்). இவ்வாறு அதே பள்ளியில் எழுதி நிறைய மதிப்பெண்கள் பெற்று முழுத் தேர்வு உற்று, பின் அரசாங்கப் பரிசுகளும் பெறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/93&oldid=782662" இலிருந்து மீள்விக்கப்பட்டது