இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
芬4
நாடோடி இலக்கியம்
கண்டகண்ட கோவிலெல்லாம்
கையெடுத்துக் கும்பிடுவார்;
காணுத கோவிலுக்குக்
காணிக்கை அனுப்பிவைத்தார்;
இலையிலே சாதமுண்டால்
என்ன தவம் என்றுசொல்லித் தரையை அவர்மெழுகிச்
சாதங்கள் உண்டார்கள்; பாலடைக்குப் பால்கொடுப்பார்,
பசித்தார் முகம்பார்ப்பார்; தவித்துவந்த பேர்களுக்குத்
தண்ணீர் கொடுப்பார்கள்; சாலைகள் போட்டுவைத்தார்,
சத்திரங்கள் கட்டிவைத்தார்; நல்லதண்ணீர்க் கிணறுகளும்
கடைவாவி கட்டி வைத்தார்; அந்தணர் பிராம்மணர்ச்கு
அக்ரகாரம் கட்டிவைத்தார்; தேசபர தேசிகட்குத்
திருமடங் கட்டிவைத்தார்; குளங்களை வெட்டிவைத்தார்,
கோபுரமுங் கட்டிவைத்தார்: என்ன தவம் பண்ணிலுைம்
எதஞலும் பிள்ளையில்லை; பெருமையாய்ப் பத்தாண்டு
பெய்த பெருமழைக்குத் தெப்பமாய் மிதந்துகின்று
சேர்ந்துதலம் பண்ணிஞர்கள்: