இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான்மணிக்கடிகை 19
புகைவித்தாப் பொங்கழல் தோன்றுஞ் சிறந்த நகைவித்தாத் தோன்றும் உவகை - பகையொருவன் முன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின் இன்னாவித் தாகி விடும். (31)
பிணியன்னர் பின்னோக்காப் பெண்டிர் உலகிற் கணியன்னர் அன்புடை மாக்கள் - பிணிபயிரின் புல்லன்னர் புல்லறிவின் ஆடவர் கல்லன்னர் வல்லென்ற நெஞ்சத் தவர். (32)
அந்தணரின் நல்ல பிறப்பில்லை யென்செயினும் தாயிற் சிறந்த தமரில்லை - யாதும் வளமையோ டொக்கும் வனப்பில்லை எண்ணின் இளமையோ டொப்பது உ மில். (33)
இரும்பி னிரும்பிடை போழ்ப பெருஞ்சிறப்பின் நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின் அரிய வரியவற்றாற் கொள்ப பெரிய பெரியரா னெய்தப் படும். - - (34)
மறக்களி மன்னர் முற் றோன்றுஞ் சிறந்த - அறக்களி யில்லாதார்க்குக் கீயுமுற் றோன்றும் வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாங் கயக்களி .. ஊரிற் பிளிற்றி விடும். (35)