பக்கம்:நான்மணிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்மணிக்கடிகை

29

நான்மணிக்கடிகை 29

கற்றன்னார் கற்றாரைக் காதலர் கண்ணோடார் செற்றன்னார் செற்றாரைச்சேர்ந்தவர்-தெற்றென்ன உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புறையும்

புற்றன்னர் புல்லறிவி னார்.

56

மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார் வேண்டா வினையும் பெறுபவே - யாண்டும் பிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர்

துறப்பார் துறக்கத் தவர்.

57

என்று முளவாகு நாளும் இருசுடரும் என்றும் பிணியுங் தொழிலொக்கும் - என்றும் கொடுப்பாருஞ் கொள்வாரு மன்னர் பிறப்பாருஞ்

சாவாரும் என்று முளர்.

58

இனிதுண்பான் என்பான் உயிர்கொல்லா துண்பான் முனிதக்கான் என்பான் முகனொழிந்து வாழ்வான் தனியன் எனப்படுவான் செய்தநன் றில்லான் இனியன் எனப்படுவான் யார்யார்க்கே யானும்

முனியா வொழுக்கத் தவன்.

59

ஈத்துண்பான் என்பான் இசைநடுவான் மற்றவன் கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் - தெற்ற நகையாகு நண்ணார்முற் சேறல் பகையாகும்

பாடறியா தானை இரவு.

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/31&oldid=1386285" இலிருந்து மீள்விக்கப்பட்டது