பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

எழுதச் சொல்லி அதை ஒரு முறை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடத்தினார். இந் நாடகங்களில் எல்லாம் தானே முக்கிய பாத்திரமாக நடித்து வந்தார். இவர் நடித்ததை சில முறைகள் நான் பார்த்திருக்கிறேன். ஆயினும் இவர் நடிப்பு எனக்கு அவ்வளவு திருப்திகர மாயில்லை, நான் பார்த்த சமயத்தில் இவருக்கு 55 வயதிற்கு மேல் ஆகவே முகத்தில் நரை திரை அதிகமாயிருந்தது. ஆயினும் மற்றவர்களுக்கு நடிப்புக் கலையை கற்பிப்பதில் இவர் கெட்டிக்காரர் நான் இவர் கடைசி முறை நடித்ததைப் பார்த்திருக்கிறேன். உத்தர ராம சரித்திரத்தில் ஸ்ரீ ராமராக நடித்தபோது, தலையில் கிரீடம் இல்லாமல் நடித்த சமயம் என்னுடன் பக்கத்தில் உட்கார்ந்து நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் ஆப்த நண்பர் வி, வி. ஸ்ரீனிவாச அய்யங்கார் “தலை மொட்டை ராமனாம் தள்ளாத கிழவனாம்” என்னும் முதல் அடியை எடுத்துக் கொடுத்து மற்ற மூன்று அடிகளையும் பூர்த்தி செய்யும்படி என்னைக் கேட்டார். நானும் அப்படியே செய்தேன். ஆயினும் அவ்விருத்தத்தை இங்கு எழுதுவதற்கில்லை. இவர் அதற்கப்புறம் பல வருடங்கள் உயிர் வாழ்ந்தார். இவரை எங்கள் சபையில் ஒரு கௌரவ அங்கத்தினராக இவர் நாடக கலைக்கு செய்த தொண்டின் பொருட்டு நியமித்து கௌரவப் படுத்தினோம்.

ஸ்ரீ D. V. கிருஷ்ணமாச்சார்லு

இவர் முழுப்பெயர் ஆந்திர நாடக பிதா மகன் தருமவரம் வெங்கட கிருஷ்ணமாச்சார்லு. இவர் பல்லாரியை சார்ந்தவர். இவருக்கு ஆந்திர தேசத்தார் ஆந்திர நாடக பிதா மகன் என்று பட்டப் பெயர் கொடுத்தது மிகவும் பொருத்தமானது. இவரால் தான் அதற்கு முன்பாக சென்சு நாடகம் வீதி நாட்கங்களாய் இருந்த தெலுங்கு நாடகமானது ஒழுங்கு செய்யப்பட்டு மேடை மீதில் தக்க திரைகளுடனும் நடிகர்கள் ஏற்ற உடையுடனும் ஒழுங்காக ஆக்கப்பட்டு முன்னேற்றமடைந்தது. இவர் பல்லாரியில் வக்கீலாக வேலைபார்த்து பொருள் சம்பாதித்தார். அதைக் கொண்டு பல்லாரி சரச வினோதினி சபா என்னும் ஓர் நாடக சபையை ஸ்தாபித்தார். அதில் அங்கத்தினராக சேர்ந்தவர்களெல்லாம் நல்ல கல்விமான்கள் ஊதியத்திற்காக நாடகமாடாது வினோதத்திற்காகவும் பாஷையை அபிவிருத்தி செய்வதற்காகவும் உழைத்தவர்கள். இவர் தெலுங்கில் மிகவும் பெயர் பெற்ற கல்விமான்; அன்றியும் சங்கீதமும் கற்றவர். இவர். தான் ஏற்படுத்திய சபைக்காக சுமார் 18 மேற்பட்ட