பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம் அறிந்த கி. வா. ஜ. 10.

எந்த இலக்கிய நூலிலே சந்தேகம் ஏற்படினும் உடனடியாக விளக்கம் கி.வா. ஜ, அவர்களிடமிருந்து கிடைக்கும் என்பதைத் தமிழறிஞர்கள் பலரும் அறிவர். அவ்வளவு அபார ஞாபக சக்தி படைத்தவர். i.

பிறர் உதவியை நாடாமல், ‘நானே எழுதுவேன்’ என்கிற மன உறுதியோடு, நோய்வாய்ப்பட்டிருந்த தம் இறுதிக் காலத்திலுங்கூட இவர் தம் கையினாலேயே எ ழு தி ெய ழு தி, தலைப்புகளுடன் கட்டுக்கட்டாக வைத்துள்ள, இன்னமும் அச்சேறாத தமிழ் நூல்களைப் பார்க்கும்போது தமிழன்பர்களின் கண்களில் நீர் துளும்பும். -

தாமே முயன்று தம்மை உயர்நிலை க்கு உயர்த்திக் கொண்டவர் திரு. கி.வா. ஜகந்நாதன்.