ஆசானின் இல்லத்தில்
கிளம்பினார். அந்தச் சமயம் ஸ்ரீமத் ஐயர், தரனை நினைக நெஞ்சம்’ என்பதாக ஒரு வெண்பாவுக்குரிய ஈற்றடியைக் கொடுத்து அதை வைத்துக்கொண்டு மற்ற வற்றைப் பூர்த்தி செய்யும்படி இவரிடம் சொன்னார்.
இவர் உடனே காகிதத்தையும், பேனாவையும் எடுத்துக்கொண்டார். இப்பொழுதே வேண்டுமென்ப தில்லை. இரவு நன்றாக யோசித்து எழுதிக் காலையில் கொண்டு வாருங்கள், போதும்’ என்றார் ஆசான்,
‘இப்போதே எழுதிவிடுகிறேன்’ என்றார் இவர். - “ஏன் இவ்வளவு அவசரம்? வெண்பாவில் தளை பார்த்து நிதானமாக எழுதலாமே” என ஐயரவர்கள் சொன்னார். இவருக்கோ உடனே எழுதிக் காட்டிவிட வேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று. சரசரவென்று ஒரு வெண்பாவை எழுதினார். ‘பாட்டு எழுதிவிட்டேன்’ என்றார்.
‘அதற்குள்ளேயா? தப்புந் தவறுமாகப் பாடுவதில் பயனில்லை. மனம் போனபடி பாட்டைத் தொடங்கி விட்டு, அப்புறம் சரிப்படுத்தக் கூடாது. பாட்டு நன்றாக இருக்க வேண்டும்’ என்றார். இவரிடம் அவருக்கு நம்பிக்கை இல்லை. -
“இதோ பாட்டைப் படிக்கிறேன்’ என்று சொல்லி, இவர் படித்தார்: -
“கொன்றை மலர்மறைத்துக் கோடுயர்ந்த !
- - #. வேம்பலரைத் துன்றமுடித்த துரையை வெள்ளி-மன்றிற் பரனையங்க யற்கண்ணி பங்கனைக் கூடற்கக் தரனை நினைகநெஞ் சம்’
என்பதே இவர் எழுதிய பாட்டு: - - . . . . . - பூர்மத் ஐயர், “எங்கே, இன்னும் ஒரு முறை சொல்ல. னும்’ என்றார்.இவர் மறுபடியும் பாட்டைப் படித்தார்.