பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - - 208

அந்த ப்ரூஃபை ஐயரவர்கள் தாம் பார்த்தவுடன், :இன்னும் கொஞ்சம் பழக வேண்டும். மொத்தத்தில் நன்றாகவே பார்த்திருக்கிறாய்’ என்றார்.

பின்னர், இதெல்லாம் என்ன புள்ளி வைத்திருக் கிறாய்?’ எனக் கேட்டார். அங்கெல்லாம் இவர் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைச் சொன்னார்.

ஆசானுக்கு மிகவும் மகிழ்ச்சி யாகிவிட்டது. இவரிடம், “நீயும் இனி ப்ரூஃப் பார்க்கணும்’ என்றார். -

தக்கயாகப்பரணியைவிடச் சிறந்த நூல்கள் வேறு இருக்கலாம்: என்றாலும், இவருக்குத் தம் ஆசானிடத்தில் பெருமதிப்பை வாங்கித் தந்த நூல் அந்தப் பரணிதான்.

X. Ž х

குறுக்தொகை” - ஆசான் கண்ட உரை :

கடைச்சங்க நூல்களுள் சிறந்த இலக்கியங்களாக விளங்குவன எட்டுத் தொகை நூல்களாகும். அந்தத் தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. அதற்குப் பழைய உரை ஏதும் கிடைக்காமையால் புதிய உரை எழுதி ஐயரவர்கள் பதிப்பிக்க வேண்டுமென்று பல தமிழன்பர்கள் வேண்டிக்கொண்டார்கள்.

பல ஆண்டுகளாக ஐயரவர்களும் குறுந்தொகை பற்றி ஆராய்ந்தும், தொகுத்தும் பலவகையான குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். அவ து கருத்திற்கிணங்க, அவற்றை முறைப்படுத்தி, நல்ல வடிவத்தில் அழகு பெற அமைக்க ஒருவரது துணை வேண்டியிருந்தது. அது பெரிய வேலை. அச்சிட்டால் 700 பக்கங்களுக்குமேல் வரக்கூடும்.

ஐ ய ர வர் க ன் கூட்டொருவரையும் வேண்டாக் கொற்றவனாக'ச் செயல்பட்டவர்தாம் என்றாலும், வயது முதிர்ச்சியாலும், உடல் தளர்ச்சியாலும் அவரால் முன்