பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் . 232

உபய கேrமோபரி, இதற்குமுன் அடியேன் எழுதிய கார்டு கிடைத்திருக்கு மென நம்புகிறேன். அவ்விடத்து ஆசீர்வாதத்தினால் தீபாவளி இனிதே நிறைவேறியது. காலந் தாழ்க்காது. விரைவில் சென்னை மீளுங் கருத்துடையேனாயினும் சில குடும்பத் தொல்லைகள் அச்செயலைத் தகைந்தன. நிற்க... நேற்று (1 - 11 - 29) பிற்பகலில் முருகன் திருவருளால் என்னுடைய இரண்டாம் தங்கை புஷ்பவதியானாள். மாப்பிள்ளை முதலியவர்களின் வருகையை எதிர்நோக்கி ஸ்நான தினம் 8-ஆம் தேதியாக வைத்திருக்கிறார்கள். அப்பொழுது இங்கே அடியேன் இருத்தல் நலமென்று. பெற்றோர்கள் விரும்புதலின் அதுகாறும் இருந்துவிட்டு நன்னான் ஒன்றில் புறப்பட்டுச் சென்னை வந்து சேர எண்ணியிருக்கிறேன். நான் வரும் தினத்தைப் பின்பு - விண்ணப்பித்துக்கொள்கின்றேன். -

தக்கயாகப் பரணி எ பாரங்கள் வரை வந்திருக் கிறதை அறிந்தேன். தமிழ்ச் சங்க மீட்டிங்கு எப்பொழுது நடைபெறுமோ?

என்னுடைய நமஸ்காரங்களை மகா...பூர். அண்ணா முதலியவர்களுக்கும், என் ஞாபகத்தை நண்பர்களாகிய சுப்பிரமணிய ஐயர், கோதண்டராமையர், சி. சுப்பிர மணியம் முதலியவர்களுக்கும் அறிவிக்கப் பிரார்த்திக் கிறேன். . - -

(பாடல்கள்) தலையளித்த செக்தமிழ்த்தாய் தாங்கியொலி

- ឈោ្មះដំាយuទាំង விலையளித்த கலைகள் பல மீண்டொளிரச்

- செய்வித்தான் கிலையளித்தான் மாணவர்க்கு நிலமிசைத்

தண்டமிழென்னுங் கலையளித்தா னெனலன்றிக் கழறுவது

. முளதேயோ..