ஆசானின் இல்லத்தில் - 244
கணபதி ஐயருடனும் தம் மகனின் திருமணத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.
இவரைப் பார்த்தவுடன், என்ன வேலை நடக் கிறது?’ என்று கேட்டார்.
இவர் பிள்ளையவர்களது சரித்திரம் எழுதப்பட்டு வருவதைச் சொன்னார்.
- பூரீ சுப்பிரமணிய தேசிகர் முதலியோர்களுடைய சரித்திரங்களையும், பிள்ளையவர்களின் சரித்திரத்திற்கு அங்கமாக எழுத வேண்டுமென்பது பூரீமத் ஐயரின் விருப்பம். அ த னால் மு. த லி ல் அவற்றையெல்லாம் காலவரையறையாக நீர் ஒழுங்குபடுத்திக்கொண்டு அவரிடம் சொல்ல வேண்டும்’ என்றார் அண்ணா *ஆகட்டும்’ என இவர் சொன்னபோது டிசம்பர் மாதக் குளிரில் இவரது குரல் மட்டுமல்ல, உடலும்
நடுங்கியதைக் கணபதி ஐயர் கவனித்தார் போலும்!
அண்ணா இதைக் கவனிக்கவில்லை. தமிழ் விடு .துாது கையெழுத்துப் பிரதியை அச்சகத்திற்கு அனுப் விடலாமா?’ என்று கேட்டார். -
‘இன்னும் கொஞ்சம் எழுத வேண்டியது பாக்கி இருக் கிறது. எழுதியானவுடன் பூரீமத் ஐயரைக் கேட்டுக் கொண்டு அனுப்பிவிடலாம்’ என்று இவர் சொன்னார்.
“சரி; அதைச் சீக்கிரம் எழுதும்” எனச் சொல்லி, அண்ணா, போய் வாரும் என விடை கொடுத்தனுப்பி விட்டார், -
மறு நாள் பூரீமத் ஜயர், அண்ணாவை தேற்றுப் பார்த்தாயா? என்ன சொன்னார்?’ எனக் கேட்டபோது, இவர் அண்ணாவைப் பார் த் த ைத யும், அவர் சொன்னதையும் தெரிவித்தார். -
பூரீமத் ஐயர் ஏதும் சொல்லவில்லை. அன்று பிள்ளை யவர்களது சரித்திரம் சம்பந்தமான வேலைகளைச் செய்தார்கள்.