ஆசானின் இல்லத்தில் - 24s
அவரிடமிருந்து இவர் அந்த உதவியை எதிர்பார்க்க வில்லை. தம் ஜாகைக்கு வந்தவுடன், அன்பாக அவர் வாங்கியளித்த சட்டைகளில் ஒன்றை அணிந்தார். கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகிற்று.
‘முருகா, இதுவும் உன் கருணைச் செயல்தான். பிறர் மதிப்பதற்குத் தக்க தகுதியுடையவனாக நீதான் என்னை ஆக்க வேண்டும். உன்னை என்றும் நான் என் நினைவில் இருத்திக்கொண்டே இருத்தல் வேண்டும். எல்லாம் மறந்து உன்னுடைய தியானத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையை எனக்கு நீதான் அருள் புரிதல் வேண்டும்’ எனப் பிரார்த்தனை செய்துகொண்டார்.
к X 神 மறு நாள் பிற்பகலில் அண்ணா இவரைக் கூப்பிட்டு அனுப்பினார். இவர் அவரைப் போய்ப் பார்த்தார்.
அவர் உடனே, உமக்குப் பணம் தேவைப்பட்டால் என்னிடம் நேரில் கேட்டிருக்கலாமே என்று சொன்ன போது இவருக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. -
போன மாதம் என் தாயாரிடமிருந்து பண உதவி கேட்டுக் கடிதம் வந்தவுடன், உங்களிடந்தானே நான் ரூ. 50 கடனாக வாங்கி ஊருக்கு அனுப்பினேன். பணம் வேண்டுமென்றால் நான் உங்களிடம் நேரில் கேட்கத் தயங்கியது இல்லையே!’ என இவர் சொன்னார்.
ாசரி, சரி. அது இனாமாக இருக்கட்டும் என ரீமத் ஐயர் சொல்லிவிட்டார்கள். இதை வைத்துக்கொள்’ என இவரிடம் அண்ணா ரூ. 30 கொடுத்தார்.
சமாதந்தோறும் இவ்வாறு கொடுக்கும்படியாக பூரீமத் ஐயர் என்னிடம் சொல்லிவிட்டார்கள் : எனவும் சொன்னார். - o
இவரது குடும்பத்திலுள்ள பொருள் முட்டுப்பாட்டை நீக்க ரீமத் ஐயர் அண்ணாவிடம் சொல்லியதை எண்ணி மனம் உருகினார் இவர்,