பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 罗葛伊

கூடத்தில் 10 - 8 - 30 அன்று திருமணம் நடைபெற்றது. அன்று மாலையில் சாம்பசிவ ஐயர் புல்லாங்குழல் கச்சேரி இருந்தது. பூரீமத் ஐயர், கச்சேரி முடியும்வரையில் இருந்து கேட்டார்.

இதைத் தவிரத் தம் வீட்டுத் திருமணம் என்பதற்காக அவர் வேறு எந்த வகையிலும் ஈடுபட்டுக்கொள்வதில்லை. ஆதலால் வழக்கம் போலவே அவருடைய பணிகள் நடை பெற்றன.

தம் அன்பர்கள் வீட்டுக் கல்யாணம் என்றாலும் கான்ை யிலோ, மாலையிலோ தவறாமல் ஒரு வேளை சென்று கல்யாணம் விசாரித்து வந்துவிடுவார்.

இப்படிச் சமூகத்துடன் ஒட்டியும், ஒட்டாமலும் தாமரை இலைத் தண்ணீர்போல உறவாடுவதில் அவர் சிறந்த மனிதராகத் திகழ்ந்தார்.

x X х ஆசானுடன் பயணத்தின்போது பாடிய பாடல்:

ஒரு சமயம் மயிலைக்குக் கல்யாணம் விசாரிக்கப் போக வேண்டி இருந்தது. காலையில் தம் பணியில் ஈடுபடத் தொடங்கிய ஆசான் த ம் ைம .ே ய மறந்துவிட்டார். கொஞ்சம் நேரமாகிவிட்டது.

  • அடடே, போய்ச் சீக்கிரம் ரிக்ஷா பார்த்து வர வேண்டும்’ என இவரிடம் சொன்னார். w இவர் சென்று ரிக்ஷாவை அழைத்து வந்தார். இரண்டு பேரும் அதில் ஏறிக்கொண்டார்கள். அடுத்த நிமிஷம் தமிழ் ஞாபகந்தான். -
  • ரிக்ஷாக்காரரைக் கொஞ்சம் வேகமாகப் போகும்படி சொல்வதாக ஒரு பாடல் இயற்ற வேண்டும்’ என ரீமத் ஐயர் இவரிடம் சொன்னார். . . . .

ஐயரவர்களே இப்படி ஒரு கருத்தைச் சொல்விப் பாடல் இயற்றவேண்டும் என்றால் கேட்கவேண்டுமா? இவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. -