பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - - 274

    • நல்ல நூற்பொருளை அறியுந்தோறும் உம்முடைய ஞாபகம் அதிகப்படுகின்றது. வேறொன்றையும் பார்க்க முடியவில்லை. -

“இன்று லிஜயதசமி. நண்பர் சுப்பிரமணிய ஐயர் கம்பராமாயணம் .ெ த ா ட ங் கி னா ர், நீரும் ஈண்டு இருப்பதாகவே பாவித்துக்கொண்டேன்’ என்றெல்லாம் எழுதியுள்ளார்.

இவ்வளவுக்கும் ஒரே ஒரு காரணம் இவர்கள் இரண்டு பேர் லட்சியமும் ஒன்றாகவே இருந்ததுதான். -

ஒரு கடிதத்தில் ஆசான், இடைமருதில் மால் அவதார வட்டமும்’, பனசையில் மனுராச வட்டமும் பெற்றமை தெரிந்தது. - -

“பனசைத் தலைவர்கள் பூரீ சாமிநாத தேசிகர் விஷய. மாகச் .ெ ச | ன் ன ைம யு ம் தெரிந்துகொண்டேன். அவ்வண்ணமே ஞாபகம் வைத்துச் செய்யவேண்டும். ‘கோடீசுவரக் கோவை முதலியவற்றின் குறிப்புக்கள் பனசையில் உள்ளனவா, உம் கையில் உள்ளனவா? அவர்கள் கருத்தின்படி நடப்பது நம்முடைய கடமை. ‘குறவஞ்சி'யைப்பற்றி அவர்கள் உடன்பட்டது மிகவும் திருப்தியை அளிக்கின்றது.

‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழைக் கந்தசஷ்டிக் குள்ளே பதிப்பிக்க வேண்டுமென்றார்களா, இல்லையா? அதைப்பற்றி நீர் ஒன்றும் எழுதவில்லையே! ஒரு வேளை எப்படி இருக்குமோவென்று அது சம்பந்தமாக முன்னம் எழுதி வைத்திருந்த குறிப்புக்களை ஒழுங்குபடுத்தி எழுது வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். வேறு வேலைகள் அதிகமாக நெருக்குகின்றன. * ,

‘வித்துவானுக்குக் கொடுக்க வேண்டிய மாயிருஞால வட்டத்தைக் கொடுப்பதற்கு இவ்வூரிலேயே ஏற்பாடு

1. பத்து ரூபாய். 2. ஏழு ரூபாய். 3. ஆயிரம் ரூபாய்.