பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 28፮

ஆத்தில் உள்ளார்க்கு என் ஞாபகம் சொல்லவேண்டும். இரண்டாம்பாலாறிய முதியவர்கள் யாரேனுமிருந்தால் உம்மைத் திருஷ்டி சுற்றிப் போடச் சொல்ல வேண்டும். யாருடைய கண்ணாவது பட்டிருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். அடிக்கடி கடிதம் எழுதுக.

. அன்பன்

வே. சாமிநாதன்.

(ரீமத் ஜயர் இவருக்குக் கடிதம் எழுதியதோடு ரூ. 20 மணியார்டரும் செய்தார்.) -

7–I 0–31

அநேக ஆசீர்வாதம். உபயகுசலோபரி. .

இதற்குமுன் எ ழு திய கடிதம் வந்திருக்குமே! சி. கல்யாணசுந்தரம் தான் ஒரு கடிதம் உமக்கு முன்பு எழுதியதாகவும், பதில் வாராமையாலும், எனக்கு வந்த கடிதத்தில் குறிப்பிடாமையாலும் அது உம்பால் வந்ததோ, வரவில்லையோ வென்று சொன்னான். வந்திருந்தால் அதற்குப் பதில் எழுதுக. அதிலேயே தேக ஸ்திதியைப் பற்றி எழுதினால் நானும் தெரிந்துகொள்வேன். வித்து வான் சுப்பிரமணிய ஐயர் செளக்கியமடைந்து நேற்று இரவுமுதல் வந்துகொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் தபாலைப் பார்த்தவண்ணமாக இருக்கிறேன். உமக்கு ஜ்வரம் என்பதைப் பனசைக்கும் சொல்லியனுப்பினேன். பரிசளிப்பின் தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை. இந்த மீ (இங்கிலீஷ்) 17-க்கு மேல் ஏற்படலாமோ என்று தோன்றுகிறது. பனசையி லிருந்து காஷ்பேர் சுப்பிரமணிய ஐயர் வேறு காரியமாக இவண் வந்த அன்றே ஊருக்குப் போய்விட்டார். வேறு விசேஷமொன்றுமில்லை. உமது கடிதம் வாராமையால் கவலையுற்று இதை எழுதலானேன். உமக்குச் செளகரிய