பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 292

தேர்வு எழுத முடியும். இவர் 1983-இல் வித்துவான் ஃபைனல் எழுதுவதற்கு வேண்டிய பாடங்களையெல்லாம் இரவில்கூட வெகுநேரம் திரும்பத் திரும்பப் படித்து வந்தார்.

х - X X

ஆசானின் பழைய கிளைவுகள் :

ஐயரவர்கள் பிள்ளையவர்களிடமிருந்து பா ட ம் கேட்டவர்; ஆகையால் பிள்ளையவர்களின் நல்லியல்புகள் பலவும் ஐயரவர்களிடமும் அமைந்திருந்தன. - ஒரு சமயம் ஆரியங்காவற்பிள்ளை என்ற மாணவர் ஒருவர் பிள்ளையவர்களிடம் இருந்து பாடம் கேட்டு வந்தாராம். அவர் அயலூரிலிருந்து வந்தவராதலால் எப்போதும் கவிஞர்கோமானான பிள்ளையவர்களிடமே இருந்தார். - ஒரு நாள் இரவு உறங்கிக்கொண்டிந்த பிள்ளையவர்கள் வழக்கம்போல் ந டு நி சி யி ல் விழித்துக்கொண்டார். படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகெண்டு ஜன்னல்

வழியாக வீதிப் பக்கம் பார்த்தார். -

தம் மாணவர் ஆரியங்காவற்பிள்னை, படுக்கையில் படுத்திராமல் தூணிலே சாய்ந்துகொண்டிருத்தலைக் கண்டார். அந்த மாணவரது வாய் அப்போது ஒரு பாடலை முனகிக்கொண்டிருந்தது. கவிதை எழுதும் பயிற்சி அவருக்கு உண்டென்பதை முன்பே பிள்ளையவர்கள் அறிவார். -

மாணவரது பாடல் தடைப்படக் கூடாது என்று, பிள்ளையவர்கள் திரும்பவும் படுத்துக்கொண்டார். உறங்கு வாரைப்போல அந்தப் பாடலைக் கேட்கலானார்.

விடவாளை வென்ற விழியாளைப் பூமியின் மேலதிர கடவாளைப் பெண்கள்தம் காயகமாம் ஒரு நாயகத்தை