பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 30?

கொஞ்சநேரமென்ன, எப்போதுமே மகாலட்சுமி போன்ற அந்தப் பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இவருக்குத் தோன்றியது. அதற்குள் காய்ந்துபோன தம் தொண்டையை நனைத்துக்கொள்ள முதலில் கொஞ்சம் நீர் பருகினார். பின்னர், பாலைக் குடித்தார். பாலைக் குடிக்கும்போதே அந்தப் பெண்ணும் தன்னையே கள்ளம் கபடமில்லாத அன்புடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். சட்டென்று எழுந்து கொண்டார்.

வேலை இருக்கிறது. நான் வருகிறேன்’ எனச் சொல்லிக்கொண்டு கிளம்பினார். எதையோ விட்டுவிட்டு வந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது, இவரது மனத்தில்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ராமசாமி ஐயரின் வீட்டுக்கு ஐயரவர்கள் கிளம்பினார். நீரும் வரவேண்டும்’ என்று ஆசான் இவரை அழைத்தவுடன் இவருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. - -

இரண்டு பேரும் ராமசாமி ஐயரின் வீட்டிற்குச் சென்றார்கள். போகும்போது இவரை மஞ்சள், பூ, பழம், வெற்றிலை, சீவல் என்று வாங்கச் சொன்னார். ஆசான் சாமசாமி ஐயரின் வீட்டிற்குப்போனவுடன் ஒரு தாம்பாளம் கொண்டுவரச் சொல்வி அவற்றை எல்லாம் ஐயரவர்களே எடுத்துவைத்தார்.

ராமசாமி ஐயர் மிக்க வியப்புடன் இவர்களைப் பார்த்தார். R

ரொம்ப நாள் கழித்து வருகிறேன். அதுவும் ஒரு சுப. காரியமாக வருகிறபோது, அதற்கேற்ற சம்பிரதாயத் தோடு வரவேண்டாமா?’ எனச் சொல்லிச் சிரித்துக் கொண்டார், ஐயரவர்கள். அப்போதுதான் இவருக்கு இனம் தெரியாத ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று.

இவர்கள் கொஞ்சநேரம் ஏதோ பேசிக்கொண்டிருந் தார்கள். உள்ளேயிருந்து சொஜ்ஜி, பஜ்ஜி எல்லாம்