பக்கம்:நாராயணன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மென எண்ணினர். அதற்குள் அச்சிறுவன் அப்பொருளை எடுத்துக் கொண்டு எழுந்து நின்றான். அப்போது அங்கே வந்தவன் மாணிக்கமே என்பதையும், அவன் தோண்டி எடுத்த பொருள் தன் கைக்கடிகாரமே என்பதையும் அவர் நன்றாக உணர்ந்தார்.

 ஆசிரியர் பாடசாலையிலே இருப்பது மாணிக்கத்துக்குத் தெரியாது. ஆதலால், அவன் சிறிதும் அச்சமின்றி அங்கே வந்து கடிகாரத்தை எடுத்துப் போக எண்ணினான். அ வ ன் கடிகாரத்தை எடுத்துக் கொண்டு எழுந்து நின்று பலகணியின் பக்கமாகத் திரும்பினான். ஆசிரியர் அங்கே நின்றிருப்பதை அறிந்ததும் அவன் முதலில் மிகவும் பயந்து அசைவற்று நின்றான். பிறகு, அவன் கடிகாரத்துடன் அவ்விடத்தை விட்டு ஒடிப்போய்விட ஆரம் பித்தான். ஆனால், அவன் அவ்வாறு இரண்டோர் அடி வைத்து ஓடுவதற்குள் யாரோ ஒருவன் வேகமாக வந்து தன்னை மிக வலுவாகப் பிடித்துக் கொண்டதை உணர்ந்து ஒன்றும் செய்ய இயலாமல்

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/55&oldid=1340265" இலிருந்து மீள்விக்கப்பட்டது