பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கதவைத் திறக்கப்போகிறான்; காற்று வெளிச்சம் பார்க்கப்போகிறான் ; ஈனக்குரல் அவனைச்சுற்றி எழுந்தும் ‘அவர்களுக்கு உதவவேண்டும்,’ என்ற ஞானநெறி அவனுக்கு ஏன் தோன்றவில்லை? கடந்த நாள்கள் போய்விட்டன; போவன போகட்டும்; இனிச் சிந்தனை செய்து, நல்லறம் உந்துதல் செய்வானாக நானிலம் செழிக்க அனைவரும் உழைக்க! உலகம் தழைக்க!

இன்னல்கள் வருகின்றன. இடர்ப்பாடுகள் நேர்கின்றன; இவற்றிற்கு எல்லாம் காரணங்கள் உள்ளன; காரணம் இல்லாமல் காரியம் நிகழ்வது இல்லை; கருக் கொள்ளாமல் எதுவும் உருப்பெறுவது இல்லை; நீ செய்த தீவினை அது உன்னை இந்நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது ; சிந்தித்துப்பார் ; உன்னை நீ திருத்திக்கொள்; நல்லதே செய்க! நன்மையே விளையும். வினை விதைத் தவன் வினை அறுப்பான்; இதில் இருந்து யாரும் தப்ப முடியாது; அற நூல்கள் ‘கருமம்’ ‘விதி’ என்று இவற்றிற்குப் பெயர்கள் தரும்; இவற்றை வெல்ல தருமமே தக்க துணை நெறியாகும்.

வாழ்க்கை அர்த்தமுள்ளது; இதனையறியாதவர் இதனை வியர்த்தமாக்கிவிட்டு வருத்தம் அடைவர். “ஏன் பிறந்தேன்?” என்று எழுப்பும் வினாவினை ஒவ் வொருவரும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். பிறந்தாகிவிட்டது; அதனைப் பற்றிய பிரச்சினையை எழுப்ப உனக்கு உரிமை இல்லை; ‘நீர்க்குமிழி’, இந்தப் பிறப்பு; அது வெடித்து மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுகிறது; சாறு எடுக்கப்பட்ட கரும்பு; ‘வெறும் சக்கை; அதனை எரிக்கும்போது யாரும் வருத்தப்படுவது இல்லை; மனிதனும் இனிய கரும்புதான்; அதன் சுவை அதற்கு உதவாது. அதனைக் கடித்துச் சுவைப்பார்க்கே