பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


இனியும் தாமதித்து என்ன பயன்?இளமை வீணே கழிகிறது; நோயும் மூப்பும் உடன்பிறப்புகளாக இணைந்து வந்து சேரப் போகின்றன. அவற்றில் நண்பர்கள் இருமல், பொருமல், மடித்து வைத்த மருந்துப் பொட்டலங்கள். டானிக்குகள், அவற்றை ஊற்றிக் கொடுக்க 'வெள்ளை ரோஜாக்கள்'. இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்துத் தப்பித்துக் கொள்பவன்தான் அறிவாளி பேசாமல் சந்நியாசம் கொள். எந்தக் கவலையும் வராது; பற்றுகள் அணுகா.

அறிமுகம் ஆனவன்தான்; அதனால் தேடிவந்து அழைப்பிதழ் தருகின்றான். மணவிழாவிற்கு வருக என்று. 'தனியாக இருந்த நீ இனித் துணையாக ஒருத்தியைத் தேடுகிறாய். இதன் அணையாக நீ எதைச் சாதிப்பாய்?" என்று கேட்கிறேன் 'நன்மகனைப்பெற்று நானிலம் வாழ்விப்பேன்' என்கிறான். "அவள் மலடி ஆகிவிட்டால்" என்று வினா எழுப்புகிறேன். "என் செய்வது?" என்று கேட்கின்றான் "பொன் செய்வது" என்று புன் முறுவல் பூக்கின்றேன். அடுத்துத் தக்க வருவாய் இல்லை என்றால் எப்படி வாழ்வாய்? என்று கேட்கிறேன். இந்தச் சிக்கலில் அகப்படாமல் விலக வழியாது?" என்கிறான். "பேசாமல் சந்நியாசம் கொள்! இதுதான் நாலடி சொல்கின்ற ஓரடி."

"மலை குலைந்தாலும் தன் நிலைகுலையாத மாண்பு உடையவரே தவத்தை மேற்கொள்வர். நெஞ்சு உறுதி இல்லை என்றால் தவத்தைப்பற்றிக் கிஞ்சித்தும் எண்ண மாட்டார். இல்லாழ்க்கையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணற்க, துறவும் கடினமானதே; நல்லொழுக்கம் காத்துத் துறவுபேண வேண்டும். மேனகையைக் கண்டு நீ நகைக்கத் துவங்கினால் உன் வாழ்வு பிறர் ஏளனத்துக்கு ஆளாக அமையும்."