பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

எல்லாம் காரணம் வினையின் ஆற்றல். "அவன் புத்தி தடுமாற வேண்டும் என்று இருந்தது" என்றுதான் கூறவேண்டும். சபலத்துக்கு இரையாகி விட்டான். யாரும் அதிலிருந்து தப்பமுடியாது. நடுநிலைமை கெட்டுவிட்டான்; அவன் நன்மதியால் பொருள் கை நீட்டி வாங்குவதில்லை என்று உறுதியோடு வாழ்ந்தவன்தான்; மாசுமரு அற்ற வாழ்க்கை; அன்று அவன் கெட்டகாலம். "யார் அறியப் போகிறார்கள்? கொடுத்தவன் சொல்லப்போவது இல்லை; வருவது வேண்டாம் என்று எப்படித் தள்ளுவது?" என்ற சிறு சபலம்; அடுத்த வினாடி, அவனுக்குக் கைவிலங்கு. தொண்ணூற்று ஒன்பது நாள் அவன் பத்தினி, உலகம் மன்னிக்காது; எல்லாம் விதியின் செயல்; மற்றொருவன் யார் ஜோலிக்கும் போகான்; தான் உண்டு; தன் வீடு உண்டு என்று வாழ்ந்து வரும் மண்டு; நன்மையையும் தேடுவது இல்லை; தீமையையும் நாடுவது இல்லை. அவன் வீட்டில் அன்று திருடன் புகுந்து அவனை அடித்துப் போட்டுவிட்டு உள்ளதைச் சுருட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டான். இது செய்தி; அவன் யாருக்கும் ஒரு தீங்கு செய்தது இல்லை; அப்பாவிதான் எந்தப் பாவியோ அவனை அடித்துப்போட்டான். காரணம் விதி; அதனால் ஏற்பட்டது இந்தக் கதி.

முருகா! உனக்கு வந்த செல்வம் சிறுகாது; பெருமை அருகாது; முறை கெட்டுத் தாரார். வருவது வந்து தீரும்; போவது போய்த்தான் தீரும், இன்னாருக்கு இன்னது என்று முன்னாளே அவன் எழுதி விட்டான்; அவன் எழுதியதை யாரும் மாற்ற முடியாது. அரசியல் சட்டம் அன்று தேவைக்கு ஏற்ப மாற்றுவதற்கு; எனவே அந்த எழுத்து நன்கு அமைய வேண்டுமானால் உன் காரியங்களும் நன்மையில் அமைய வேண்டும். அப்பொழுதுதான் மூல ஆசிரி-