பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கிறாய் ? பொருளை இறுகப் பிடித்துக் கொள்வது நல்லதா ? நல்ல செயல்களுக்குப் பயன் படுத்துவது நல்லதா ?

"இன்பம் இந்த உலகம் அள்ளித் தருகிறது; துள்ளும் இளமை உனது; இன்பத்தில் தோய்ந்து மகிழ்ந்து கிட: அதுதான் தக்கது." இப்படிக் கூறுகின்றவர் பலர்; "நீ கொன்கைகளில் உறுதியாக இரு. இன்பம், பொருள் இவற்றை நாடுவதில் நாட்டம் காட்டாதே. அறமே வாழ்வின் நியதி; குறிக்கோள். அதற்காக வாழ்ந்தால் வீடுபேறு கிடைக்கும்" என்கின்றனர் சிலர் நீ எதை விரும்புகிறாய்? உண்மை எது? எழுதிச் சில வரிகளில் விடை தருக, மதிப்பெண்தான் தரமுடியும்.

13. தீயவை செய்ய அஞ்சுக

(தீவினை அச்சம்)

வாயில்லாத ஜீவன்கள்; எதிர்த்துப் பேச இயலாத உயிர்கள்; அவற்றை வதைத்து வயிற்றில் அடக்குகிறீர்கள்: உங்கள் வயிறு என்ள சுடுகாடா? இல்லை புதைகாடு.

செத்துவிட்டவர்களை ஊருக்குள் புதைத்து அவர்களை அடக்கம் செய்ய அஞ்சுகிறீர்கள். ஏன்? அது முடை நாற்றம் வீசும் என்பதால் ஆடு, கோழி இவற்றை அடித்துக் கொன்று அவற்றைப் புதைத்து வைக்க உங்கள் வயிற்றைத் தேடுகிறீர்களே! உங்கள வயிறு அழுகல் அடுக்கும் குப்பை மேடா?

தூய உடம்பை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மாய்ந்த சடலங்களைத் திணிப்பதைத் தவிருங்கள்.