பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

கிறோம்; சான்றோர் என்று மதிக்கிறோம்; சேய்மையில் இருந்து பார்க்கும்போது அவர்கள் தூய்மை நிறைந்தவர் என்று தோன்றுகிறது. நெருங்கிப் பழகினால் அவர்கள் சுருங்கிய உள்ளம் கண்களில் படுகின்றது. சந்தனம் உள்ளே இருக்கும் என்று கருதி அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தால் பாம்பு அங்கே படுத்துக் கிடக்கிறது. அதிர்ச்சி ஏற்படுகிறது; ஏமாற்றம் காணப்படுகிறது. யாரையும் புறத்தோற்றம் கண்டு மதிப்பதற்கு இல்லை.

யாரும் ஒருவர் உள்ளத்தை மற்றவர்கள் ஆராயும் திறன் படைத்தவர் அல்லர் காண்பது ஒன்று; அவர்கள் உள்ளம் வேறு ! பேசுவது ஒன்று நடந்து கொள்வது வேறு ஆக இருக்கிறது. மனம் வேறு செயல் வேறு என்று பலர் உலகில் நடந்து கொள்கின்றனர்; எனவே தக்க நட்பினர் யார் என்று தேடிக் காண்பது எளிது அன்று.

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பச்சோந்திகள் அவர்களை நம்ப வேண்டாம். சமயத்தில் கழுத்து அறுத்து விடுவார்கள்; எனவே பொன்னை உரை கல்லில் வைத்துப் பார்ப்பது போலக் கொஞ்சம் தேய்த்துப் பார்த்தே நட்பினைத் தேர்ந்து கொள்க. ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் ஒன்று இரண்டு சொற்களில் அவர்கள் நடிப்பு வெளிப்பட்டு விடும். தீயவர் நட்பைத் தீவினை என்று அஞ்சுக; அவர்களை விட்டு விலகுக.

கத்தி கையில் இருந்தால் அது தற்காப்புக்கு உதவும் என்று கருதுகிறாய்; தீயவர் தொடர்பு சமயத்துக்கு நன்மை என்று கருதலாம்; அடியாட்களை வைத்துக்கொண்டு கடினமான செயல்களைச் சாதிக்கலாம் என்று கணக்குப் போடலாம்; மடியில் கனம் இருந்தால் வழியில் தனம் பறி-