பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

களுக்குத் தீயவர் சேர்க்கையால் சாய்வுகள்; ஏற்படுவது உண்டு, மரக்கலம் உறுதி உடையதுதான் என்றாலும் சூறைக் காற்று வீசினால் அது கவிழ்ந்து விடாமல் இருப்பது இல்லை; தீயவன் இணக்கம் சூறாவளி போன்றது. திடீர் என்று அவர்கள் வந்து சேர்வதால் அவர்கள் தாக்குதலினால் நல்லவர் தம் சீர்மையும் கெட வாய்ப்புள்ளது. எனவே உறுதி உடைய பெரியோர்கள் கூடத் தம்மிடம் சேர்பவர் யார் என்றும் கவனிக்க வேண்டும்; கண்டவரோடு உண்டு மகிழ விருப்புக் கொள்ளக்கூடாது. அற்பர் நட்பு உயிருக்குச் சேதம் விளைவிக்கும். மனத்தால் மாசு அற்றவர் என்றாலும் இனத்தால் ஆசு ஏற்பட வழியாகிறது; இனம் கொண்டு அவர் இகழ்ப்படுவர்; காட்டிலே தீப்பற்றிக் கொண்டால் மேட்டிலே உள்ள சந்தனமும் வேங்கையும் வேகாமல் போகாது; உயர் மரங்களும் பற்றி எரியும். கோரைப் புல்லில் பற்றிய தீ ஏனைய மரங்களின் வேரையும் அழிக்கும். சிற்றினம் கூடாது; சேர் இடம் அறிந்து சேர்க.

19. பேருண்மைகள்

(பெருமை)

எது உண்மை? நன்மை தருவது உண்மை; அதுவே மெய்ப் பொருள் ஆகும். இந்த வாழ்க்கைக்கு என்ன பொருள்? பிறர்க்கு ஈய முடிவதில்லை; அதற்கு வேண்டிய உள்ளம் குறைகிறது; பொருளும் அருகுகிறது. வாரி வழங்கக் கூடிய வழி இல்லை. எதற்காக வாழ்வது? இளமை நாம் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே நம்மை விட்டு அகல்கிறது. இளமை இன்பம் தருவது. ஆனால் அதை நம்ப முடிவதில்லை; காதலித்துக் கூடிய

6