பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

வேண்டும். எள்ளிப் பேசுவது மனத்துள்ளலால் விளைவது; பிறரை மகிழ்விப்பது; ரசனையே இல்லாத மண்டுகளிடம் சிரிப்பு வரப் பேச முயன்றால் அவர்கள் தம்மை இழிவுபடுத்துவதற்காகவே இவ்வாறு பேசிவிட்டார் என்று சீற்றம் காட்டுவார். அறிவு நிரம்பிய சான்றோர் சலனமற்று வாழ்வர்; அவர்களிடம் குத்தலாகப் பேசினாலும் அவர்கள் குறையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்; பெருமை பெருமைதான் சிறுமை சிறு தான்.

யாரிடம் எப்படிப் பேசவேண்டும்? எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும். புதிதாக மணந்து கொண்டவளிடம் அவள் மகிழப் பேசவேண்டும்? “உன் மூக்கு என்ன சப்பையாக இருக்கிறதே; நெற்றி மேடாக இருக்கிறதே” என்று விவரித்தால் அவள் உன்னைக் கேடாக நினைப்பாள். “அதி சுந்தரி நீ; வனிதாமணி” என்றால் அவள் உன் உறவுக்கு உடனே படிவாள்; தடித்தனமாக அவளிடம் நடந்துகொள்ளக் கூடாது.

பயில்வானிடம் சண்டைபோடச் செல்கிறாய்; அங்கே அவனிடம் மெல்ல வருடிக் கொண்டு இருக்க முடியாது; தூக்கி எறிய முனையவேண்டும்; முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். வஞ்சகரை நயமாகப் பேசி அவர்களை வெற்றி கொள்ளவேண்டும். நல்லவர்களிடம் நன்மை தோன்ற நடந்துகொள்ள வேண்டும். எங்கே யாரிடம் பேசுகிறோம் என்பது அறிந்து பேசுவது வாழ்க்கையில் வெற்றி தரும்.

முடுக்கிக் கசப்பான வார்த்தைகளைச் சொல்லி இடுக்கி விட விரும்புகிறான் ஒருவன். கோள் சொல்லி நல்லவனாக நடிக்க விரும்புகிறான். இல்லாதது பொல்லாதது