பக்கம்:நாலும் இரண்டும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தக்க அல்ல வொரு அறநெறிக்கும்-அதிகாரத்துக்கும் இது பொருந்துவ: தாகும். உலகமே இந்தக் குறள்வழி ஒழுகிலைன்றி உய்ய, வழியில்லை. தனிமனித வாழ்விலே அவனவனுக்கென வரை யறுத்த-செய்ய வேண்டியவற்றைச் செய்து அல்லனவற்றைச் செய்யாது வாழ்ந்தால் நாடும் நகரும் ஊரும் உலகமும் அமைதியாக இயங்கும் என்பது உறுதி. நாடாளும் நல்லவர் களும் அவர்கள் வழி இயங்கும் சமுதாயமும் இந்த உண்மையை உணர்ந்து செய்யத்தக்கவற்றைச் செய்து. அல்லாதனவற்றை அற நீக்கி வாழ்ந்து வையத்தை வாழ: வைக்க வேண்டுமெனக் கேட்டு அமைகின்றேன். 33