பக்கம்:நாவுக்கரசர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 நாவுக்கரசர்

கொலைத் தொழிலாளர்கள் அரசனது ஆணையை மேற்கொண்டு சமணர்கள் தம்மொடு வர திருநாவுக்கரசரை அழைத்துச் சென்று கல்லொடு பிணித்துப் படகிலேற்றிக் கடல் நடுவே தள்ளிவிட்டுத் திரும்புகின்றனர். ஏவலர் சென்ற பின்னர் மெய்த் தொண்டராகிய திருநாவுக்கரசர் :எப்பரிசாயினும் ஆக ஏத்துவன் எந்தையை’ என்று கூறி ஐந்தெழுத்து மந்திரத்தை ஒதுகின்றார்.

சொற்றுணை வேதியன்

சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி

பொருந்தக் கைதொழக் கற்றுனைப் பூட்டியோர்

கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது

நமச்சி வாயவே. எனத் தொடங்கும் நமச்சி வாயத் திருப்பதிகத்தைப் (4. 11) பாடிப் போற்றுகின்றார். இத் திருப்பதிகத்தினைப் பாடிப் போற்றியபொழுது அவரோடு பிணிக்கப்பட்டுக் கடலில் தள்ளப்பட்டக் கருங்கல் கடல்மீது மிதக்கின்றது: கல்லில் கட்டப்பெற்ற கயிறும் அறுந்தொழிகின்றது. நாவுக்கரசர் பெருமான் அக்கல்லின்மீது மிதக்கின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான்,

இருவினைப் பாசமும்

மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில்வீழ்

மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத்

தரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல்

உரைக்க வேண்டுமோ?? என்று உளமுருகிப் போற்றுகின்றார்.

6. பெ. பு: திருநாவுக்-129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/79&oldid=634434" இலிருந்து மீள்விக்கப்பட்டது