பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.3 நிசப்த சங்கதம்

ச' அதிருக்கட்டும் சின்னி! நான் பேப்பரிலே படிச்சது நெசந்

தானா.......?’ என்றான். - -

'எதைக் கேட்கிறே?.."

'அதான்ப்பா...அந்தச் சேலத்துப் பொண்ணு நளினி. விஷயம்...?' . . . . - -

"ஆமாம்பா...! முதல்லேருந்தே அது இந்த லயன்லே' ஸ்ெட் ஆகலே... ரொம்பத் தகராறுதான் கடைசியிலே இப்படி ஆயிப்போச்சு...' *கொஞ்சம்கூட வருத்தப்படாமச் சர்வசாதாரணமாச் சொல்றியே அதை? உனக்கு அக்கா, தங்கச்சி இருந்து அது இப்படி மண்ணெண்ணையெ ஊத்தி உடம்புல நெருப்பு வச்சுக்கிட்டுப் போயிருந்தா இப்படிச் சொல்வியா...?

அதர்னோ என்னவோ...எனக்கு உடப்பு பெறப்பே இல்லேப்பா’-இதையும் மிகவும் சகஜமாகத்தான் சொன் னான் சின்னி. அவனையும் உடனழைத்துக்கொண்டு உள்ளே சென்று தீப்பெட்டி தீப்பெட்டியாகத் தடுக்கப்பட்டிருந்த அந்த விடுதி அறைகளில் அவளுடைய அந்த அறைமுன்

அடையாளம் கண்டு தயங்கி நின்றான் முத்துராமலிங்கம்.

அங்கே அன்று அந்த அறையும், அதே வரிசையிலிருந்த மற்ற அறைகளும் சகலமும் சாவு வீடு போல் நிசப்தமா உயிருந்தன. ஒரு குரூரமான சோக அமைதி நிலவியது. ஆளரவமே இல்லை. - - - - .

'இன்னும் புத்து நாளைக்கு இங்கே பேச்சு மூச்சு இருக் காது'...இது சின்னி. - - - - "

அந்த நிசப்தத்திலிருந்துதான் முன்பு ஒருமுறை ஒரு சிறிய சங்கீதம் பிறந்தது-ஒலித்தது-தன்னைச் சில விநாடிகள் மகிழ்வித்தது என்பதை நினைத்தபோது முத்து.

ராமலிங்கத்தின் கண்கள் நெகிழ்ந்தன. *

எங்கோ எப்போதோ, ஏதோ ஒர் அவசரத்தில் சந்தித்த -கேட்ட ஒருத்தியின் குரலாக அதை அவன் மறந்துவிட